• Jun 09 2025

வெசாக் பொதுமன்னிப்பு சர்ச்சை; சிறைச்சாலை துணை ஆணையாளர் கைது..!

shanuja / Jun 9th 2025, 10:29 am
image

வெசாக் தினத்தில்  ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் ஒரு கைதி சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும்  குற்றச்சாட்டில், அனுராதபுரம் சிறைச்சாலையின் துணை ஆணையாளர் குற்றப் புலனாய்வுத் துறையால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.



4 மில்லியன் ரூபா முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிதி நிறுவனத்தின் முன்னாள் அனுராதபுர கிளை மேலாளரான டபிள்யூ.எம். அதுல திலகரத்ன, ஜனாதிபதி பொதுமன்னிப்பில் கடந்த வெசாக் தினத்தில் விடுவிக்கப்பட்டார். 


இந்த விடுவிப்பு தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் வெசாக் தினத்தில் கருணைக்காக அங்கீகரிக்கப்பட்ட 388 கைதிகளின் அதிகாரபூர்வ பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்தும் ஒரு வலுவான அறிக்கையை ஜனாதிபதி செயலகம்  வெளியிட்டது.


அந்த அறிக்கையின்படி, அரசியலமைப்பின் 34(1) வது பிரிவின் கீழ், ஜனாதிபதி பரிந்துரையின் பேரில் மன்னிப்பு வழங்கலாம். சிறைச்சாலை அதிகாரிகளால் பெயர்கள் பட்டியலிடப்பட்டு, நீதி அமைச்சினால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, பின்னர் இறுதி ஒப்புதலுக்காக ஜனாதிபதி செயலகத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. இருப்பினும், மே (6) ஆம் திகதி  அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் திலகரத்னவின் பெயர் இல்லை.- என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது. 


இதனையடுத்து இது தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆரம்பித்திருந்தது. விசாரணையின் முதற்கட்டமாக  சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரலிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என்று பொலிஸ்  ஊடகப் பிரிவு தெரிவித்தது. இந்த நிலையிலேயே அனுராதபுரம் சிறைச்சாலையின் துணை ஆணையாளர் குற்றப் புலனாய்வுத் துறையால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.


2025 வெசாக் காலத்தில் வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை செயல்படுத்துவதில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து CID நடத்தி வரும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்தக் கைது உள்ளது. ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்படாத கைதிகளை சட்டவிரோதமாக விடுவிக்க மன்னிப்பு தவறாகப் பயன்படுத்தப்பட்டதா ? பொதுமன்னிப்புப் பட்டியலில் இல்லாதே கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டனரா? என்றவாறான நிலையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெசாக் பொதுமன்னிப்பு சர்ச்சை; சிறைச்சாலை துணை ஆணையாளர் கைது. வெசாக் தினத்தில்  ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் ஒரு கைதி சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும்  குற்றச்சாட்டில், அனுராதபுரம் சிறைச்சாலையின் துணை ஆணையாளர் குற்றப் புலனாய்வுத் துறையால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.4 மில்லியன் ரூபா முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிதி நிறுவனத்தின் முன்னாள் அனுராதபுர கிளை மேலாளரான டபிள்யூ.எம். அதுல திலகரத்ன, ஜனாதிபதி பொதுமன்னிப்பில் கடந்த வெசாக் தினத்தில் விடுவிக்கப்பட்டார். இந்த விடுவிப்பு தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் வெசாக் தினத்தில் கருணைக்காக அங்கீகரிக்கப்பட்ட 388 கைதிகளின் அதிகாரபூர்வ பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்தும் ஒரு வலுவான அறிக்கையை ஜனாதிபதி செயலகம்  வெளியிட்டது.அந்த அறிக்கையின்படி, அரசியலமைப்பின் 34(1) வது பிரிவின் கீழ், ஜனாதிபதி பரிந்துரையின் பேரில் மன்னிப்பு வழங்கலாம். சிறைச்சாலை அதிகாரிகளால் பெயர்கள் பட்டியலிடப்பட்டு, நீதி அமைச்சினால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, பின்னர் இறுதி ஒப்புதலுக்காக ஜனாதிபதி செயலகத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. இருப்பினும், மே (6) ஆம் திகதி  அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் திலகரத்னவின் பெயர் இல்லை.- என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது. இதனையடுத்து இது தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆரம்பித்திருந்தது. விசாரணையின் முதற்கட்டமாக  சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரலிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என்று பொலிஸ்  ஊடகப் பிரிவு தெரிவித்தது. இந்த நிலையிலேயே அனுராதபுரம் சிறைச்சாலையின் துணை ஆணையாளர் குற்றப் புலனாய்வுத் துறையால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.2025 வெசாக் காலத்தில் வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை செயல்படுத்துவதில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து CID நடத்தி வரும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்தக் கைது உள்ளது. ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்படாத கைதிகளை சட்டவிரோதமாக விடுவிக்க மன்னிப்பு தவறாகப் பயன்படுத்தப்பட்டதா பொதுமன்னிப்புப் பட்டியலில் இல்லாதே கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டனரா என்றவாறான நிலையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement