• Jun 08 2025

கொழும்பு மாநகர மேயர் ராய் கெலி பல்தசார் என்பது நிச்சயிக்கப்பட்டு விட்டது! - அநுர தரப்பு நம்பிக்கை

Chithra / Jun 8th 2025, 10:07 am
image


கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு ஆளுங்கட்சிக்கு 11 உறுப்பினர்கள் மாத்திரமே தேவையாகும். ஆனால் 11க்கும் அதிகமான சுயேச்சை உறுப்பினர்கள் அவர்களது ஆதரவை எமக்கு வழங்கியுள்ளனர்  என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்டு உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர், தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக உறுதியளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

கொழும்பில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து 48 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். ஆட்சியமைப்பதற்கு இன்னும் எமக்கு 11 உறுப்பினர்கள் மாத்திரமே தேவை. 

ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 29 பேர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் ஆட்சியமைக்க வேண்டுமெனில் இன்னும் 30 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாகும்.

11க்கும் அதிகமான சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவு எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்காக உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போது தேசிய மக்கள் சக்தி பூர்த்தி செய்துள்ளது. 

ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி தற்போது எத்தனை உறுப்பினர்கள் இருக்கின்றனர் என்பதையோ, யார் மேயர் வேட்பாளர் என்பதையோ கூற முடியாது அக்கட்சியினர் தடுமாறுகின்றனர்.

ஆனால் நாம் தேர்தல் பிரசாரத்துக்கு முன்னதாகவே எமது மேயர், பிரதி மேயரையும் அறிவித்திருக்கின்றோம். 

நாளை வாக்கெடுப்பினை நடத்தினாலும் நாம் வெற்றி பெறுவோம். கொழும்பு மாநகர மேயர் ராய் கெலி பல்தசார் என்பது நிச்சயிக்கப்பட்டு விட்டது என்றார்.  

கொழும்பு மாநகர மேயர் ராய் கெலி பல்தசார் என்பது நிச்சயிக்கப்பட்டு விட்டது - அநுர தரப்பு நம்பிக்கை கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு ஆளுங்கட்சிக்கு 11 உறுப்பினர்கள் மாத்திரமே தேவையாகும். ஆனால் 11க்கும் அதிகமான சுயேச்சை உறுப்பினர்கள் அவர்களது ஆதரவை எமக்கு வழங்கியுள்ளனர்  என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.தேசிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்டு உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர், தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக உறுதியளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.இந்நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கொழும்பில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து 48 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். ஆட்சியமைப்பதற்கு இன்னும் எமக்கு 11 உறுப்பினர்கள் மாத்திரமே தேவை. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 29 பேர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் ஆட்சியமைக்க வேண்டுமெனில் இன்னும் 30 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாகும்.11க்கும் அதிகமான சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவு எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்காக உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போது தேசிய மக்கள் சக்தி பூர்த்தி செய்துள்ளது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி தற்போது எத்தனை உறுப்பினர்கள் இருக்கின்றனர் என்பதையோ, யார் மேயர் வேட்பாளர் என்பதையோ கூற முடியாது அக்கட்சியினர் தடுமாறுகின்றனர்.ஆனால் நாம் தேர்தல் பிரசாரத்துக்கு முன்னதாகவே எமது மேயர், பிரதி மேயரையும் அறிவித்திருக்கின்றோம். நாளை வாக்கெடுப்பினை நடத்தினாலும் நாம் வெற்றி பெறுவோம். கொழும்பு மாநகர மேயர் ராய் கெலி பல்தசார் என்பது நிச்சயிக்கப்பட்டு விட்டது என்றார்.  

Advertisement

Advertisement

Advertisement