• May 22 2026

நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்ட ரணில் மீண்டும் நாடாளுமன்றம் வருவது நல்லது! - தயாசிறி எம்.பி. தெரிவிப்பு

Chithra / Jan 4th 2026, 12:17 pm
image


நெருக்கடி நிலையில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவே நாட்டை மீட்டெடுத்தார். எனவே, அவர் மீண்டும் நாடாளுமன்றம் வருவது  நாட்டுக்கு நல்லது என  நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.


இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-


கடந்த கால அரசுகளை விமர்சித்து, 76 வருடகால சாபம் எனக் கூறியே தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சிக்கு வந்தனர். எனினும், என்.பி.பி. ஆட்சியில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் என்ன?


76 வருட கால "சிஸ்டம்" முறையற்றது என விமர்சித்தவர்கள், அதைவிடவும் மோசமான “சிஸ்டத்தை” தற்போது செயற்படுத்தி வருகின்றனர். நாட்டில் கணக்காய்வாளர்கூட இல்லை.


அதேவேளை, நெருக்கடி நிலையில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவே நாட்டை மீட்டெடுத்தார். எனவே, அவர் மீண்டும் நாடாளுமன்றம் வருவது நாட்டுக்கு நல்லது.


ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைவது ஜனநாயக அரசியலுக்குச் சிறந்த விடயமாகும்." - என்றார்.

நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்ட ரணில் மீண்டும் நாடாளுமன்றம் வருவது நல்லது - தயாசிறி எம்.பி. தெரிவிப்பு நெருக்கடி நிலையில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவே நாட்டை மீட்டெடுத்தார். எனவே, அவர் மீண்டும் நாடாளுமன்றம் வருவது  நாட்டுக்கு நல்லது என  நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-கடந்த கால அரசுகளை விமர்சித்து, 76 வருடகால சாபம் எனக் கூறியே தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சிக்கு வந்தனர். எனினும், என்.பி.பி. ஆட்சியில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் என்ன76 வருட கால "சிஸ்டம்" முறையற்றது என விமர்சித்தவர்கள், அதைவிடவும் மோசமான “சிஸ்டத்தை” தற்போது செயற்படுத்தி வருகின்றனர். நாட்டில் கணக்காய்வாளர்கூட இல்லை.அதேவேளை, நெருக்கடி நிலையில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவே நாட்டை மீட்டெடுத்தார். எனவே, அவர் மீண்டும் நாடாளுமன்றம் வருவது நாட்டுக்கு நல்லது.ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைவது ஜனநாயக அரசியலுக்குச் சிறந்த விடயமாகும்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement