வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி உற்சவத்தின் இரண்டாம் நாள் காலை உற்சவ பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றன.
கந்தசஷ்டி விரத இரண்டாவது நாள் உற்சவத்தில் அலங்காரக்கந்தன் உள்வீதியுடாக வலம்வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கந்தசஷ்டி விரதத்தின் இரண்டாவது நாள் உற்சவத்தில் யாழின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.