• May 19 2024

பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சாக்களே காரணம் - நீதிமன்ற தீர்ப்பு குறித்து நாமலின் பதில் என்ன? samugammedia

Chithra / Nov 15th 2023, 3:50 pm
image

Advertisement

 

ஸ்ரீலங்காக பொதுஜன பெரமுன எப்போதும் நீதித்துறையை மதித்துவந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்களே காரணம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலேயே நாமல் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.

நீதித்துறை எழுத்துமூல ஆதாரங்களை மாத்திரம் ஆராய்ந்துள்ளது வாய் மூல ஆதாரங்கள் கோரப்படவில்லை.

பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய்வதற்கான சிறந்த இடம் நாடாளுமன்றமே.

இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்றம் தெரிவுக்குழுவொன்றை நியமிக்கலாம்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு அனைத்து விடயங்களையும் ஆராய்வதற்கான ஆதாரங்களை கோரலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சாக்களே காரணம் - நீதிமன்ற தீர்ப்பு குறித்து நாமலின் பதில் என்ன samugammedia  ஸ்ரீலங்காக பொதுஜன பெரமுன எப்போதும் நீதித்துறையை மதித்துவந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்களே காரணம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலேயே நாமல் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.நீதித்துறை எழுத்துமூல ஆதாரங்களை மாத்திரம் ஆராய்ந்துள்ளது வாய் மூல ஆதாரங்கள் கோரப்படவில்லை.பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய்வதற்கான சிறந்த இடம் நாடாளுமன்றமே.இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்றம் தெரிவுக்குழுவொன்றை நியமிக்கலாம்.நாடாளுமன்ற தெரிவுக்குழு அனைத்து விடயங்களையும் ஆராய்வதற்கான ஆதாரங்களை கோரலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement