• Jul 27 2024

பணத்திற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை..! இலங்கையில் அதிகாலையில் நடந்த பயங்கரம்

Chithra / May 19th 2024, 11:10 am
image

Advertisement

குருணாகல்  - மீரிகம - மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவர் வீட்டில் வைத்து படுகொலை செய்துள்ளார்.

இக் கொடூர சம்பவம் இன்று (19) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

80 வயதான தந்தை, 77 வயதான தாய் மற்றும் 42 வயதான மகன் ஆகியோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

42 வயதுடைய ஒருவரே இந்தக் கொலைகளை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை மிதிவண்டியில் பயணித்த நபரை சோதனையிட்ட பொலிஸார், அவரிடம் இருந்து சுமார் 3 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றியுள்ளனர்.

இதனடிப்படையில் சந்தேகநபரை கைது செய்த பொலிஸார், அவரிடம் இருந்த கடிதங்களை பரிசோதித்த போது ​​கொலைச் சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


பணத்திற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை. இலங்கையில் அதிகாலையில் நடந்த பயங்கரம் குருணாகல்  - மீரிகம - மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவர் வீட்டில் வைத்து படுகொலை செய்துள்ளார்.இக் கொடூர சம்பவம் இன்று (19) அதிகாலை இடம்பெற்றுள்ளது.80 வயதான தந்தை, 77 வயதான தாய் மற்றும் 42 வயதான மகன் ஆகியோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.42 வயதுடைய ஒருவரே இந்தக் கொலைகளை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இன்று அதிகாலை மிதிவண்டியில் பயணித்த நபரை சோதனையிட்ட பொலிஸார், அவரிடம் இருந்து சுமார் 3 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றியுள்ளனர்.இதனடிப்படையில் சந்தேகநபரை கைது செய்த பொலிஸார், அவரிடம் இருந்த கடிதங்களை பரிசோதித்த போது ​​கொலைச் சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement