விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அத்தோடு இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு 10 வாரத்தை கடந்து ஒளிபரப்பாகின்றது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆறாவது சீசனில் கடந்த வாரம் முதல் முறையாக டபுள் எலிமினேஷன் நடைபெற்றது.
அந்தவகையில் கடந்த வாரத்தில் சனிக்கிழமை ராம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆயிஷா என இருவர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இவ்வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேறுவார்கள் என எதிர்ப்பார்த்திருந்த ரசிகர்களுக்கு திடீர் அதிர்ச்சியாக இலங்கையிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றிய ஜனனி வெளியேற்றப்பட்டார்.
இதனையடுத்து ஜனனியின் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளதுடன் சமூகவலைத்தளங்களில் ஜனனிக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.