• Sep 20 2024

பதவி விலகிய நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து நீதியான விசாரணை அவசியம்; நீதி அமைச்சிடம் சுப்பையா ஆனந்தகுமார் கோரிக்கை...!samugammedia

Anaath / Sep 29th 2023, 4:00 pm
image

Advertisement

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைகளில் வழங்கப்பட்ட கட்டளைகள் காரணமாக உயிர் அச்சுறுத்தலையும், தொடர்ச்சியான அழுத்தங்களையும் எதிர்கொண்டதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள  நிலையில் அதன் பின்புலத்தில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூவர் அடங்கிய குழுவின் உறுப்பினர் சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

முல்லைத்தீவு மாவட்டத்தில் குறுந்தூர் மலை பிரச்சினை பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. அதன் பின்னணியில் அண்மையில்  புதிதாக குருந்தூர் மலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற விகாரை, சிலைகள் மற்றும் சுருவங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களும் அகற்றப்பட வேண்டும் என கட்டளை இட்ட நிலையில் இந்த பிரச்சனை தொடர்ந்தவண்ணம் உள்ள நிலையில் குறித்த நீதிபதி குறித்த கடிதத்தை அனுப்பியதுள்ளதுடன். 

அவர் தற்போது நாட்டை விட்டும் வெளியேறியுள்ளார். 

குறித்த விடயம்  தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆனந்தகுமார்

"இந்த விடயம் எமது நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள இழுக்காகும். அவருக்கு அவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்தவர்கள் மற்றும் அவரின் வெளியேற்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை நீதி அமைச்சு மேற்கொள்ள வேண்டும். 

அதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க வேண்டுமென நீதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கிறேன். நீதிபதி ரி.சரவணராஜாவின் வெளியேற்றம் நாட்டில் வாழ்வதற்கான சுதந்திரத்தை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளதால் இதுதொடர்பில் உடனடி விசாரணைகளுக்கு பணிக்க வேண்டும். 

இந்த விடயத்தை உரிய தரப்பினர் ஊடாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்ல எதிர்பார்த்துள்ளேன்" என தெரிவித்துள்ளார் 

பதவி விலகிய நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து நீதியான விசாரணை அவசியம்; நீதி அமைச்சிடம் சுப்பையா ஆனந்தகுமார் கோரிக்கை.samugammedia குருந்தூர்மலை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைகளில் வழங்கப்பட்ட கட்டளைகள் காரணமாக உயிர் அச்சுறுத்தலையும், தொடர்ச்சியான அழுத்தங்களையும் எதிர்கொண்டதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள  நிலையில் அதன் பின்புலத்தில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூவர் அடங்கிய குழுவின் உறுப்பினர் சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தில் குறுந்தூர் மலை பிரச்சினை பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. அதன் பின்னணியில் அண்மையில்  புதிதாக குருந்தூர் மலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற விகாரை, சிலைகள் மற்றும் சுருவங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களும் அகற்றப்பட வேண்டும் என கட்டளை இட்ட நிலையில் இந்த பிரச்சனை தொடர்ந்தவண்ணம் உள்ள நிலையில் குறித்த நீதிபதி குறித்த கடிதத்தை அனுப்பியதுள்ளதுடன். அவர் தற்போது நாட்டை விட்டும் வெளியேறியுள்ளார். குறித்த விடயம்  தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆனந்தகுமார்"இந்த விடயம் எமது நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள இழுக்காகும். அவருக்கு அவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்தவர்கள் மற்றும் அவரின் வெளியேற்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை நீதி அமைச்சு மேற்கொள்ள வேண்டும். அதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க வேண்டுமென நீதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கிறேன். நீதிபதி ரி.சரவணராஜாவின் வெளியேற்றம் நாட்டில் வாழ்வதற்கான சுதந்திரத்தை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளதால் இதுதொடர்பில் உடனடி விசாரணைகளுக்கு பணிக்க வேண்டும். இந்த விடயத்தை உரிய தரப்பினர் ஊடாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்ல எதிர்பார்த்துள்ளேன்" என தெரிவித்துள்ளார் 

Advertisement

Advertisement

Advertisement