• Sep 17 2024

மூடப்பட்ட தெற்கு அதிவேக வீதியின் கடுவலை நுழைவுப் பாதை!

Chithra / Jun 3rd 2024, 11:17 am
image

Advertisement

  

கடுவலைப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வௌ்ளப் பெருக்கு நிலை காரணமாக தெற்கு அதிவேகப் பாதையின் கடுவலை நுழைவுப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக களனி ஆற்றின் பல்வேறு இடங்களில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஆற்றோரப் பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கடுவலையின் பியகம பிரதான பாதை உள்ளிட்ட பல பிரதேசங்களும் இவ்வாறு வௌ்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. 

தெற்கு அதிவேகப் பாதைக்கான நுழைவுப் பாதையும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதனையடுத்து தெற்கு அதிவேகப் பாதையின் கடுவலை நுழைவுப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடுவலையில் இருந்து கடவத்தை வரை செல்லவோ, கடவத்தையில் இருந்து கடுவலை வழியாக வெளியேறவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மூடப்பட்ட தெற்கு அதிவேக வீதியின் கடுவலை நுழைவுப் பாதை   கடுவலைப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வௌ்ளப் பெருக்கு நிலை காரணமாக தெற்கு அதிவேகப் பாதையின் கடுவலை நுழைவுப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக களனி ஆற்றின் பல்வேறு இடங்களில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஆற்றோரப் பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.கடுவலையின் பியகம பிரதான பாதை உள்ளிட்ட பல பிரதேசங்களும் இவ்வாறு வௌ்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. தெற்கு அதிவேகப் பாதைக்கான நுழைவுப் பாதையும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது.இதனையடுத்து தெற்கு அதிவேகப் பாதையின் கடுவலை நுழைவுப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.இதன் காரணமாக கடுவலையில் இருந்து கடவத்தை வரை செல்லவோ, கடவத்தையில் இருந்து கடுவலை வழியாக வெளியேறவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement