• May 20 2024

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...! 45 ஆவது நாளாக தொடரும் போராட்டம்...!

Sharmi / May 9th 2024, 11:11 am
image

Advertisement

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 45 நாளாக  தொடர் கவனயீர்ப்பு  போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த  பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம்  திங்கட்கிழமை(25)   பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய  பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக 45 ஆவது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் கடந்த தினங்களை விட குறைந்தளவான மக்களே குறித்த போராட்டத்தில் பங்கேற்று வருவதை காணமுடிகின்றது.

 கடந்த காலங்களில் உதவி மாவட்ட செயலாளர் பிரிவாக செயல்பட்டு வந்த கல்முனை வடக்கு பிரதேச செயலகம், 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து 1993 ஆண்டு  அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டுகின்றனர்.

 இருந்தபோதிலும் ஒருசில அரசியல்வாதிகள் தொடக்கம் உயர் அதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு  வருவதன் காரணமாக பொது மக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை   ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளையும் கண்டித்தும், திட்டமிடப்பட்டு  பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது எனவும்  அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் என மேலும் மக்கள் தெரிவித்தனர்.




கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம். 45 ஆவது நாளாக தொடரும் போராட்டம். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 45 நாளாக  தொடர் கவனயீர்ப்பு  போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.குறித்த  பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம்  திங்கட்கிழமை(25)   பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய  பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.அதன் தொடர்ச்சியாக 45 ஆவது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.எனினும் கடந்த தினங்களை விட குறைந்தளவான மக்களே குறித்த போராட்டத்தில் பங்கேற்று வருவதை காணமுடிகின்றது. கடந்த காலங்களில் உதவி மாவட்ட செயலாளர் பிரிவாக செயல்பட்டு வந்த கல்முனை வடக்கு பிரதேச செயலகம், 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து 1993 ஆண்டு  அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டுகின்றனர். இருந்தபோதிலும் ஒருசில அரசியல்வாதிகள் தொடக்கம் உயர் அதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு  வருவதன் காரணமாக பொது மக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை   ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளையும் கண்டித்தும், திட்டமிடப்பட்டு  பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது எனவும்  அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் என மேலும் மக்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement