காங்கேசன்துறை - தமிழக கடற் போக்குவரத்து சேவை விரைவில் முன்னெடுக்கப்படும் என வணிகர் கழக தலைவர் ஆர். ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த அரசுகள் குறித்த முன்னெடுப்புக்களை முன்னெடுப்பதில் அசமந்தமாக இருந்தபோதும் இம்முறை அவற்றை அரசு நிறைவுசெய்யும்.
அது தொடர்பில் நான் அரசுடன் பேசியுள்ளேன். அதன் அடிப்படையிலேயே இதை நான் தெரிவிக்கின்றேன்.
தீவக கடற்போக்குவரத்து இன்று பெரும் சவாலாக இருக்கின்றது. வீதி அதிகார சபை செய்யவேண்டிய விடையத்தை அது கண்டுகொள்காதிருப்பதால் தான் பல அனர்த்தங்கள் நிகழ்ந்தேறியுள்ளன.
இவற்றை கருத்தில் கொண்டே அரசுடன் இது தொடர்பில் பேசி அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம், குறிகாட்டுவன் இறங்குதுறை, காங்கேசன்துறை துறைமுகம் ஆகியனவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.- என்றார்.
காங்கேசன்துறை - தமிழகம் கப்பல் சேவை விரைவில்; அநுர அரசாங்கம் நிறைவேற்றும் வணிகர் கழக தலைவர் தெரிவிப்பு காங்கேசன்துறை - தமிழக கடற் போக்குவரத்து சேவை விரைவில் முன்னெடுக்கப்படும் என வணிகர் கழக தலைவர் ஆர். ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.இது குறித்து ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த அரசுகள் குறித்த முன்னெடுப்புக்களை முன்னெடுப்பதில் அசமந்தமாக இருந்தபோதும் இம்முறை அவற்றை அரசு நிறைவுசெய்யும். அது தொடர்பில் நான் அரசுடன் பேசியுள்ளேன். அதன் அடிப்படையிலேயே இதை நான் தெரிவிக்கின்றேன். தீவக கடற்போக்குவரத்து இன்று பெரும் சவாலாக இருக்கின்றது. வீதி அதிகார சபை செய்யவேண்டிய விடையத்தை அது கண்டுகொள்காதிருப்பதால் தான் பல அனர்த்தங்கள் நிகழ்ந்தேறியுள்ளன.இவற்றை கருத்தில் கொண்டே அரசுடன் இது தொடர்பில் பேசி அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம், குறிகாட்டுவன் இறங்குதுறை, காங்கேசன்துறை துறைமுகம் ஆகியனவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.- என்றார்.