ஐக்கிய இராச்சியத்தில் வாழும், கரவெட்டி ஞானசாரியர் கல்லூரி, பழைய மாணவர்களால் (UK கிளை) ஒருங்கிணைக்கப்படும் “2025 கோலாகல கோடைவிழா” எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை கிழக்கு லண்டனில் உள்ள Redbridge , Valentines Park பகுதியில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வு, காலத்தால் மாறாத நினைவுகளை மீட்டெடுக்கவும், கல்வியளித்த தாய்க் கல்வியினை கௌரவிக்கவும், பழைய மாணவர்களுக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தவும், சமூக உறவுகளை புதுப்பிக்கவும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் குடும்பங்களுடன் வந்து குதூகலிக்குமளவு பல்வேறு விளையாட்டுக்களும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வை சிறப்பிக்க, பாடசாலையின் முன்னாள் ஆசிரியர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் என பலரும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படவுள்ளனர்.
மேலும், Redbridge கவுன்சிலராகவும், முன்னாள் மேயராகவும் பணியாற்றிய Mr. தவதுரை ஜெயரஞ்சன், Redbridge பகுதியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.
“பண்பும், பழக்கமும், பெருமையும் கொண்ட பாடசாலையோடு பாசபூர்வமான பிணைப்பை மீட்டெடுக்க, அனைவரும் ஒன்று கூடி இந்த விழாவை சிறப்பிக்க வாருங்கள் என நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்களான ஞானசாரியர் கல்லூரி, கரவெட்டி – பழைய மாணவர் சங்கம் (UK கிளை) 2025/2026 நிர்வாகக் குழு அழைப்பு விடுத்துதுள்ளது.
கரவெட்டி ஞானசாரியர் கல்லூரி, பழைய மாணவர் சங்கத்தின் “2025 -கோலாகல கோடைவிழா” ஐக்கிய இராச்சியத்தில் வாழும், கரவெட்டி ஞானசாரியர் கல்லூரி, பழைய மாணவர்களால் (UK கிளை) ஒருங்கிணைக்கப்படும் “2025 கோலாகல கோடைவிழா” எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை கிழக்கு லண்டனில் உள்ள Redbridge , Valentines Park பகுதியில் நடைபெறவுள்ளது.இந்த நிகழ்வு, காலத்தால் மாறாத நினைவுகளை மீட்டெடுக்கவும், கல்வியளித்த தாய்க் கல்வியினை கௌரவிக்கவும், பழைய மாணவர்களுக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தவும், சமூக உறவுகளை புதுப்பிக்கவும் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் குடும்பங்களுடன் வந்து குதூகலிக்குமளவு பல்வேறு விளையாட்டுக்களும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வை சிறப்பிக்க, பாடசாலையின் முன்னாள் ஆசிரியர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் என பலரும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படவுள்ளனர்.மேலும், Redbridge கவுன்சிலராகவும், முன்னாள் மேயராகவும் பணியாற்றிய Mr. தவதுரை ஜெயரஞ்சன், Redbridge பகுதியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். “பண்பும், பழக்கமும், பெருமையும் கொண்ட பாடசாலையோடு பாசபூர்வமான பிணைப்பை மீட்டெடுக்க, அனைவரும் ஒன்று கூடி இந்த விழாவை சிறப்பிக்க வாருங்கள் என நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்களான ஞானசாரியர் கல்லூரி, கரவெட்டி – பழைய மாணவர் சங்கம் (UK கிளை) 2025/2026 நிர்வாகக் குழு அழைப்பு விடுத்துதுள்ளது.