கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வடமாகாண ஆளுநர் ஆகியோரின்நாகலிங்கம் வேதநாயகம் இணைத்தலைமையில் இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இளங்குமரன் ராஜீவன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராணுவத்தினர் போலீசார் அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், விவசாயிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இன்றைய அபிவிருத்திக் குழு கூட்டத்தில், கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தினை கரைச்சி பிரதேச சபையினரிடம் கையளிக்கப்பட்டும் இனிவரும் காலங்களில் கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தும் கரைச்சி பிரதேச சபையினரே கையாழ்வார்கள் என தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன் பூநகரி கௌதாரிமுனை பகுதியில் உள்ள மணல் திட்டுகளை இயற்கை வளங்களை அழிக்கப்பட்டு வருவதை தடுக்கும் நோக்கில் அப்பகுதியில்
இருந்து சட்டவிரோத மணல் அகழ்வினை முற்றுமுழுதாக தடை செய்யப்பட்டப்பட்டுள்ளது
கல்மடுக்குளத்தின் அணைக்கட்டுகள் பாதிக்கப்பட்டு வருவதன் காரணமாகவும் கல்மடுக்குளத்தின் கீழ் இயங்கி வரும் மணல் விற்பனை நிலையத்தினை முற்றாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதேவேளை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கருத்து தெரிவிக்கையில்,
கச்சத்தீவு என்பது சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு அமைவாகவே இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டது.
எனவே எந்த வகையிலும் கச்சத்தீவை இந்தியாவுக்கு தாரைவாக்க முடியாது எனவும் தற்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் தேர்தல்கள் வரும் பொழுது மாத்திரமே கச்சத்தீவு பற்றி கதைப்பார்கள். சட்டத்திலோ அல்லது சர்வதேச சட்டத்திலோ கச்சதீவினை இந்தியாவுக்கு வழங்குவதற்கு இலங்கைச் சட்டத்தில் இடமில்லை.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்படும் பொழுது முதல் தடவையாக கைது செய்யப்படுபவர்கள் ஒரு வாரமோ அல்லது ஓரிரு தினங்களிலோ விடுதலை செய்யப்படுகிறார்கள் எனவும் தொடர்ச்சியாக இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் மாத்திரமே நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முற்படுத்தப்படுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
கச்சத்தீவை எந்த வகையிலும் இந்தியாவுக்கு தாரைவாக்க முடியாது: கடற்றொழில் அமைச்சர் சுட்டிக்காட்டு. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வடமாகாண ஆளுநர் ஆகியோரின்நாகலிங்கம் வேதநாயகம் இணைத்தலைமையில் இடம்பெற்றது.நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இளங்குமரன் ராஜீவன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராணுவத்தினர் போலீசார் அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், விவசாயிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.இன்றைய அபிவிருத்திக் குழு கூட்டத்தில், கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தினை கரைச்சி பிரதேச சபையினரிடம் கையளிக்கப்பட்டும் இனிவரும் காலங்களில் கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தும் கரைச்சி பிரதேச சபையினரே கையாழ்வார்கள் என தீர்மானம் எடுக்கப்பட்டது.அத்துடன் பூநகரி கௌதாரிமுனை பகுதியில் உள்ள மணல் திட்டுகளை இயற்கை வளங்களை அழிக்கப்பட்டு வருவதை தடுக்கும் நோக்கில் அப்பகுதியில்இருந்து சட்டவிரோத மணல் அகழ்வினை முற்றுமுழுதாக தடை செய்யப்பட்டப்பட்டுள்ளதுகல்மடுக்குளத்தின் அணைக்கட்டுகள் பாதிக்கப்பட்டு வருவதன் காரணமாகவும் கல்மடுக்குளத்தின் கீழ் இயங்கி வரும் மணல் விற்பனை நிலையத்தினை முற்றாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.இதேவேளை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கருத்து தெரிவிக்கையில்,கச்சத்தீவு என்பது சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு அமைவாகவே இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டது.எனவே எந்த வகையிலும் கச்சத்தீவை இந்தியாவுக்கு தாரைவாக்க முடியாது எனவும் தற்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் தேர்தல்கள் வரும் பொழுது மாத்திரமே கச்சத்தீவு பற்றி கதைப்பார்கள். சட்டத்திலோ அல்லது சர்வதேச சட்டத்திலோ கச்சதீவினை இந்தியாவுக்கு வழங்குவதற்கு இலங்கைச் சட்டத்தில் இடமில்லை.இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்படும் பொழுது முதல் தடவையாக கைது செய்யப்படுபவர்கள் ஒரு வாரமோ அல்லது ஓரிரு தினங்களிலோ விடுதலை செய்யப்படுகிறார்கள் எனவும் தொடர்ச்சியாக இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் மாத்திரமே நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முற்படுத்தப்படுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.