• Sep 20 2024

கெஹலியவை மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

Tamil nila / Sep 12th 2024, 7:38 pm
image

Advertisement

நேற்று (11) பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (12) கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பிலேயே அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 7 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று (11) உத்தரவிடப்பட்டது.

கெஹலியவை மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு நேற்று (11) பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (12) கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பிலேயே அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.இதன்போது முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 7 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று (11) உத்தரவிடப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement