முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் சொத்துக்கள் தொடர்பான விசாரணையில் இன்று லஞ்ச ஒழிப்பு ஆணையகத்தால் கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
விசாரணை கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கெஹெலியவின் மகள்கள், மற்றும் மருமகன் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டது.
கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள்களான சமித்ரி ரம்புக்வெல்ல, அமலி ரம்புக்வெல்ல மற்றும் மருமகனான இசுரு புலஸ்தி ஆகியோர் தலா 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், 5 மில்லியன் ரூபாய்க்கான மூன்று சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் அவர்கள் மூவருக்கும் பயணத் தடை விதிக்கப்பட்டது.
இதேவேளை வழக்கில் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதற்காக நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் ஒரு மகள் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
கெஹெலியவின் மகள்கள், மருமகன் பிணையில் விடுவிப்பு முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் சொத்துக்கள் தொடர்பான விசாரணையில் இன்று லஞ்ச ஒழிப்பு ஆணையகத்தால் கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.விசாரணை கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கெஹெலியவின் மகள்கள், மற்றும் மருமகன் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டது. கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள்களான சமித்ரி ரம்புக்வெல்ல, அமலி ரம்புக்வெல்ல மற்றும் மருமகனான இசுரு புலஸ்தி ஆகியோர் தலா 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், 5 மில்லியன் ரூபாய்க்கான மூன்று சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் அவர்கள் மூவருக்கும் பயணத் தடை விதிக்கப்பட்டது. இதேவேளை வழக்கில் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதற்காக நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் ஒரு மகள் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.