சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட இலத்திரனியல் உபகரணங்கள் உட்பட பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நால்வரும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இக்குழுவினர் 81 மடிக்கணினிகள், கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களை சட்டவிரோதமாக கடத்தி வந்துள்ளனர்.
சந்தேகநபர்கள் வெளிநாட்டு மதுபானம் மற்றும் சிகரெட்டுகளையும் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடத்தி வந்துள்ளனர்.