• Feb 21 2025

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு கிளிநொச்சி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Chithra / Feb 19th 2025, 1:29 pm
image



கடந்த 09.02.2025 மன்னார் வடக்கு கடற்பரப்பின் கிளிநொச்சி நீரியல் வளத்திணைக்கள எல்லைக்குள் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களின் வழக்கு இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமீல் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

முதலாவதாக  அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் ஊடுவி நுழைந்தமைக்காக 11 மீனவர்களுக்கும் 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 12 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.

இலங்கையில் தடைசெய்யப்பட்ட இழுவை மடி படகைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டமைக்காக 11 மீனவர்களுக்கும் 50000 ரூபா குற்றம் பணம் அறவிடப்பட்டது. இதனை செலுத்த தவறின் 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குறித்த 11 மீனவர்களில் ஒருவர் உரிமையாளராகவும் படகு ஓட்டியாகவும் காணப்படுவதால் அவரை 6 மில்லியன் ரூபா  செலுத்துமாறும் தவறின் 06 மாத சிறைத்தண்டணையும் விதிக்கப்பட்டது. 

படகு உள்ளிட்ட மீனவர்களின் தொலைபேசி பணம் தவிர்ந்த அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. 

மற்றும்  அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் ஊடுவி நுழைந்தமைக்காக 03 மீனவர்களுக்கும் 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 12 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.

இலங்கையில் தடைசெய்யப்பட்ட இழுவை மடி படகைப்பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டமைக்காக 03 மீனவர்களுக்கும் 50000 ரூபா குற்றம் பணம் அறவிடப்பட்டது. இதனை செலுத்த தவறின் 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குறித்த மூன்று இந்திய மீனவர்களில் ஒருவர் 2024ம் ஆண்டு மாச் மாதம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தினால் 5 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டிருந்தது. அந்த காலப்பகுதியில் மீண்டும் ஒரு குற்றத்தை செய்தமையால் 18 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.


கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு கிளிநொச்சி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கடந்த 09.02.2025 மன்னார் வடக்கு கடற்பரப்பின் கிளிநொச்சி நீரியல் வளத்திணைக்கள எல்லைக்குள் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களின் வழக்கு இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.குறித்த வழக்கு நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமீல் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.முதலாவதாக  அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் ஊடுவி நுழைந்தமைக்காக 11 மீனவர்களுக்கும் 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 12 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.இலங்கையில் தடைசெய்யப்பட்ட இழுவை மடி படகைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டமைக்காக 11 மீனவர்களுக்கும் 50000 ரூபா குற்றம் பணம் அறவிடப்பட்டது. இதனை செலுத்த தவறின் 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.குறித்த 11 மீனவர்களில் ஒருவர் உரிமையாளராகவும் படகு ஓட்டியாகவும் காணப்படுவதால் அவரை 6 மில்லியன் ரூபா  செலுத்துமாறும் தவறின் 06 மாத சிறைத்தண்டணையும் விதிக்கப்பட்டது. படகு உள்ளிட்ட மீனவர்களின் தொலைபேசி பணம் தவிர்ந்த அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. மற்றும்  அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் ஊடுவி நுழைந்தமைக்காக 03 மீனவர்களுக்கும் 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 12 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.இலங்கையில் தடைசெய்யப்பட்ட இழுவை மடி படகைப்பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டமைக்காக 03 மீனவர்களுக்கும் 50000 ரூபா குற்றம் பணம் அறவிடப்பட்டது. இதனை செலுத்த தவறின் 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.குறித்த மூன்று இந்திய மீனவர்களில் ஒருவர் 2024ம் ஆண்டு மாச் மாதம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தினால் 5 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டிருந்தது. அந்த காலப்பகுதியில் மீண்டும் ஒரு குற்றத்தை செய்தமையால் 18 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement