ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகவும், வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவத்தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் யாழ்.கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவானது இன்று (24) காலை 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்தும் 15 நாட்கள் இடம்பெறவுள்ள மகோற்சவத்தில் பங்குனி மாதம் 07ம் திகதி சப்பைரத திருவிழாவும், மறுநாள் காலை இரதோற்சவம் இடம்பெறவுள்ளதுடன், இரவு சிவராத்திரி விசேட பூசைகளுடன் ஆன்மீகம் சார் நிகழ்ச்சியும் இடம்பெற்று மறுநாளான 09 ம் திகதிதீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.