• Jul 05 2024

சம்பந்தனின் வெற்றிடத்திற்கு குகதாசன் நியமிப்பு..! வெளியான வர்த்தமானி

Chithra / Jul 3rd 2024, 8:26 am
image

Advertisement

 

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசனின் பெயரை அறிவித்துத் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் காலமானதால் 9ஆவது நாடாளுமன்றத்தில் ஆசன வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்தப்பட்டது. 

இதற்கமைய, இறுதியாக இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெறப்பட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் 16,170 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ள சண்முகம் குகதாசன், இரா.சம்பந்தனின் மறைவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார்.

சம்பந்தனின் வெற்றிடத்திற்கு குகதாசன் நியமிப்பு. வெளியான வர்த்தமானி  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசனின் பெயரை அறிவித்துத் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் காலமானதால் 9ஆவது நாடாளுமன்றத்தில் ஆசன வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்தப்பட்டது. இதற்கமைய, இறுதியாக இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெறப்பட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதனடிப்படையில் 16,170 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ள சண்முகம் குகதாசன், இரா.சம்பந்தனின் மறைவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement