நானுஓயா தோட்டப்பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 28 குடும்பங்களைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமர்செட் தோட்டத்தில் உள்ள நெடுங்குடியிருப்பில் வசிக்கும் 28 குடும்பங்களைச் சேர்ந்த 120ற்கும் மேற்பட்டவர்கள், சமர்செட் தோட்டத்தின் லாண்டல் பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக நேற்றையதினம் (30) இரவு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இடம்பெயர்ந்தவர்கள் நானுஓயா சமர்செட் தோட்டத்தில் உள்ள கலாபுரம் தமிழ் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களுக்கு உணவு மற்றும் தேவையான உதவிகளை வழங்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நானுஓயா பகுதியில் பெய்த கனமழையால் இந்த மண்சரிவு ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
மண்சரிவு அபாயம். நூற்றுக்கணக்காணோர் இடம்பெயர்வு. நானுஓயா தோட்டப்பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 28 குடும்பங்களைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமர்செட் தோட்டத்தில் உள்ள நெடுங்குடியிருப்பில் வசிக்கும் 28 குடும்பங்களைச் சேர்ந்த 120ற்கும் மேற்பட்டவர்கள், சமர்செட் தோட்டத்தின் லாண்டல் பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக நேற்றையதினம் (30) இரவு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.இடம்பெயர்ந்தவர்கள் நானுஓயா சமர்செட் தோட்டத்தில் உள்ள கலாபுரம் தமிழ் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு உணவு மற்றும் தேவையான உதவிகளை வழங்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.நானுஓயா பகுதியில் பெய்த கனமழையால் இந்த மண்சரிவு ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.