படுகொலை செய்யப்பட்ட நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம்(31) யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறையில் அமைந்துள்ள யாழ் வடமராட்சி ஊடக இல்ல அலுவலகத்தில் இன்று மாலை 4.00 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில், நடேசனின் உருவப் படத்திற்கு மலர் தூவி, சுடரேற்றி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ் வடமராட்சி ஊடக இல்ல தலைவர் கு.மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் ஊடக இல்லத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
நடேசனின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஸ்டிப்பு. படுகொலை செய்யப்பட்ட நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம்(31) யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.பருத்தித்துறையில் அமைந்துள்ள யாழ் வடமராட்சி ஊடக இல்ல அலுவலகத்தில் இன்று மாலை 4.00 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில், நடேசனின் உருவப் படத்திற்கு மலர் தூவி, சுடரேற்றி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.யாழ் வடமராட்சி ஊடக இல்ல தலைவர் கு.மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் ஊடக இல்லத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.