• Feb 16 2026

சட்டங்களை மாற்றியமைத்து இலங்கை பல்கலைக்கழகங்களின் தகைமையை உயர்த்த வேண்டும் - ரஜீவன் எம்.பி!

shanuja / Jan 23rd 2026, 5:03 pm
image


பல்கலைக்கழக  சட்டங்களை மாற்றியமைத்து பல்கலைக்கழகங்களுக்குரிய ஆளணிகளை நியமித்து இலங்கை பல்கலைக்கழகங்களின் தகைமையை உயர்த்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்துள்ளார். 


பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற பல்கலைக்கழக திருத்தச்சட்ட விவாதத்தில் உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


துணைவேந்தர்களை நியமிப்பது பேரவை சிபாரிசின் அடிப்படையில் நிகழ்கின்றது.  இதுவரை காலமும் துணைவேந்தர்கள் விரும்புகின்றவர்களை தான் துறைத்தலைவர்களையும் பீடாதிபதிகளையும் நியமிக்கின்றனர். 


நியமனத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினுடைய பலமான கண்காணிப்போடு பேரவை சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். 


துறைசார் தலைவர்களை வளப்படுத்த வேண்டும். தரம் கொண்டவர்களை நியமிக்க வேண்டும். நாட்டை விட்டு 566 விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு விலகியுள்ளனர். 


பல்கலைக்கழகங்களுக்கு நிரப்படவேண்டிய ஆளணி கோரப்பட்ட நிலையில் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


எனவே பல்கலைக்கழக  சட்டங்களை மாற்றியமைத்து பல்கலைக்கழகங்களுக்குரிய ஆளணிகளை நியமித்து இலங்கை பல்கலைக்கழகங்களின் தகைமையை உயர்த்த வேண்டும் எனத் தெரிவித்தார். 

சட்டங்களை மாற்றியமைத்து இலங்கை பல்கலைக்கழகங்களின் தகைமையை உயர்த்த வேண்டும் - ரஜீவன் எம்.பி பல்கலைக்கழக  சட்டங்களை மாற்றியமைத்து பல்கலைக்கழகங்களுக்குரிய ஆளணிகளை நியமித்து இலங்கை பல்கலைக்கழகங்களின் தகைமையை உயர்த்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற பல்கலைக்கழக திருத்தச்சட்ட விவாதத்தில் உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், துணைவேந்தர்களை நியமிப்பது பேரவை சிபாரிசின் அடிப்படையில் நிகழ்கின்றது.  இதுவரை காலமும் துணைவேந்தர்கள் விரும்புகின்றவர்களை தான் துறைத்தலைவர்களையும் பீடாதிபதிகளையும் நியமிக்கின்றனர். நியமனத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினுடைய பலமான கண்காணிப்போடு பேரவை சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். துறைசார் தலைவர்களை வளப்படுத்த வேண்டும். தரம் கொண்டவர்களை நியமிக்க வேண்டும். நாட்டை விட்டு 566 விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு விலகியுள்ளனர். பல்கலைக்கழகங்களுக்கு நிரப்படவேண்டிய ஆளணி கோரப்பட்ட நிலையில் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.எனவே பல்கலைக்கழக  சட்டங்களை மாற்றியமைத்து பல்கலைக்கழகங்களுக்குரிய ஆளணிகளை நியமித்து இலங்கை பல்கலைக்கழகங்களின் தகைமையை உயர்த்த வேண்டும் எனத் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement