• Jun 01 2025

உள்ளூராட்சி சபைத் தேர்தல்: இதுவரை 123 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் பதிவு..!

Sharmi / Apr 10th 2025, 8:55 am
image

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஆரம்பமானது முதல் இது வரையான காலப்பகுதியில் 123 தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய 13 வேட்பாளர்கள் உட்பட 55 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றில் 24 வன்முறைச் சம்பவங்களும் 99 விதிமீறல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

மேற்படி சம்பவங்களுடன் தொடர்புடைய 55 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர் வேட்பாளர்களாவதுடன் ஏனைய 42 பேர் தேர்தல் விதி மீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஆதரவாளர்களாவர்.

மேற்படி விதிமீறல் மற்றும் குற்றச் சம்பவங்களுக்குப் பயண்படுத்தப்பட்ட 11 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை ஏப்ரல் 8 முதல் 9 அதிகாலை வரையான காலப்பகுதியில் மாத்திரம் ஒரு தேர்தல் வன்முறைச் சம்பவம் மற்றும் 12 தேர்தல் விதிமீறல்கள் தொடர்பிலும் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு வேட்பாளர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பதிவாகியுள்ள தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்: இதுவரை 123 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் பதிவு. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஆரம்பமானது முதல் இது வரையான காலப்பகுதியில் 123 தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய 13 வேட்பாளர்கள் உட்பட 55 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.அவற்றில் 24 வன்முறைச் சம்பவங்களும் 99 விதிமீறல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.மேற்படி சம்பவங்களுடன் தொடர்புடைய 55 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர் வேட்பாளர்களாவதுடன் ஏனைய 42 பேர் தேர்தல் விதி மீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஆதரவாளர்களாவர். மேற்படி விதிமீறல் மற்றும் குற்றச் சம்பவங்களுக்குப் பயண்படுத்தப்பட்ட 11 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை ஏப்ரல் 8 முதல் 9 அதிகாலை வரையான காலப்பகுதியில் மாத்திரம் ஒரு தேர்தல் வன்முறைச் சம்பவம் மற்றும் 12 தேர்தல் விதிமீறல்கள் தொடர்பிலும் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளன.அத்தோடு வேட்பாளர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பதிவாகியுள்ள தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement