• Oct 05 2024

குத்தகை நிறுவனத்தின் பெட்டகங்களை உடைத்து இலச்சக்கணக்கில் கொள்ளை..!!samugammedia

Tamil nila / Feb 1st 2024, 8:04 pm
image

Advertisement

சிலாபத்திலுள்ள பிரதான குத்தகை நிறுவனமொன்றின் கிளையின்  பெட்டகத்தை உடைத்த கொள்ளையர்கள், அதிலிருந்து சுமார் 71 இலட்சம் ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளதாக சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த குத்தகைக் நிறுவனத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள் குழுவொன்று சுவர்களை உடைத்து உள்ளே நுழைந்ததாகவும் அதன் பின்னர் பல மணித்தியாலங்கள் அங்கு தங்கியிருந்து இயந்திர கிரைண்டரைப் பயன்படுத்தி இரண்டு பெட்டகங்களை வெட்டி அதிலிருந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இந்த நிலையில் இன்று காலை குந்தகை நிறுவன ஊழியர்கள், கடமைக்காக வந்தபோது,   தமது நிறுவனத்தின் பெட்டகங்கள் உடைக்கப்பட்டு பணம் எடுத்துச் செல்லப்பட்டிருந்ததை அவதானித்ததுடன், இதுபற்றி பொலிஸாருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குத்தகை நிறுவனத்தின் பெட்டகங்களை உடைத்து இலச்சக்கணக்கில் கொள்ளை.samugammedia சிலாபத்திலுள்ள பிரதான குத்தகை நிறுவனமொன்றின் கிளையின்  பெட்டகத்தை உடைத்த கொள்ளையர்கள், அதிலிருந்து சுமார் 71 இலட்சம் ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளதாக சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த குத்தகைக் நிறுவனத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள் குழுவொன்று சுவர்களை உடைத்து உள்ளே நுழைந்ததாகவும் அதன் பின்னர் பல மணித்தியாலங்கள் அங்கு தங்கியிருந்து இயந்திர கிரைண்டரைப் பயன்படுத்தி இரண்டு பெட்டகங்களை வெட்டி அதிலிருந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த நிலையில் இன்று காலை குந்தகை நிறுவன ஊழியர்கள், கடமைக்காக வந்தபோது,   தமது நிறுவனத்தின் பெட்டகங்கள் உடைக்கப்பட்டு பணம் எடுத்துச் செல்லப்பட்டிருந்ததை அவதானித்ததுடன், இதுபற்றி பொலிஸாருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.குறித்த இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement