• Sep 20 2024

நோய் பரவும் அபாயம் குறைவு - இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரவுள்ள முட்டைகள்!

egg
Chithra / Jan 24th 2023, 11:01 am
image

Advertisement

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

கடந்த 6 மாதங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் நாட்டுக்குள் நோய் பரவும் அபாயம் மிகக் குறைவு என்று குழு பரிந்துரைத்தால், அந்த நாட்டிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கலாம் என்றும் அவர் கூறினார்.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள அலுவலகத்தில் நேற்று (ஜன.) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஹேமலி கொத்தலாவல இதனைத் தெரிவித்தார்.

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கோரிய இரண்டு கடிதங்கள் கடந்த 11ஆம் திகதி அரச வர்த்தக மற்றும் சட்ட ரீதியான கூட்டுத்தாபனத்திற்கு கிடைத்ததாகவும், அதற்கான நிபந்தனைகள் கடந்த 13ஆம் திகதி அறிவிக்கப்பட்டதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

அண்மைக்கால வரலாற்றில் இலங்கைக்கு முட்டை இறக்குமதி செய்யப்படவில்லை எனவும், அதற்கமைவாக குறித்த இரு நிறுவனங்களும் சமர்ப்பித்த ஆவணங்கள் கடந்த 16ஆம் திகதி ஆலோசனைக் குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் திருமதி கொத்தலாவல குறிப்பிட்டார். கடந்த 17ம் திகதி அரசு வணிக சட்ட கழகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

முட்டை இறக்குமதிக்கு அனுமதி கோரும் இரு அமைப்புகளும் நேற்று (23) அளித்த தகவல்களை மீண்டும் குழுவுக்கு அனுப்பும் என்றும், இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதால் நோய் பரவும் அபாயம் குறைவு என குழு பரிந்துரைத்தால், இறக்குமதி செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

நோய் பரவும் அபாயம் குறைவு - இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரவுள்ள முட்டைகள் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.கடந்த 6 மாதங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் நாட்டுக்குள் நோய் பரவும் அபாயம் மிகக் குறைவு என்று குழு பரிந்துரைத்தால், அந்த நாட்டிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கலாம் என்றும் அவர் கூறினார்.கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள அலுவலகத்தில் நேற்று (ஜன.) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஹேமலி கொத்தலாவல இதனைத் தெரிவித்தார்.முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கோரிய இரண்டு கடிதங்கள் கடந்த 11ஆம் திகதி அரச வர்த்தக மற்றும் சட்ட ரீதியான கூட்டுத்தாபனத்திற்கு கிடைத்ததாகவும், அதற்கான நிபந்தனைகள் கடந்த 13ஆம் திகதி அறிவிக்கப்பட்டதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.அண்மைக்கால வரலாற்றில் இலங்கைக்கு முட்டை இறக்குமதி செய்யப்படவில்லை எனவும், அதற்கமைவாக குறித்த இரு நிறுவனங்களும் சமர்ப்பித்த ஆவணங்கள் கடந்த 16ஆம் திகதி ஆலோசனைக் குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் திருமதி கொத்தலாவல குறிப்பிட்டார். கடந்த 17ம் திகதி அரசு வணிக சட்ட கழகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.முட்டை இறக்குமதிக்கு அனுமதி கோரும் இரு அமைப்புகளும் நேற்று (23) அளித்த தகவல்களை மீண்டும் குழுவுக்கு அனுப்பும் என்றும், இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதால் நோய் பரவும் அபாயம் குறைவு என குழு பரிந்துரைத்தால், இறக்குமதி செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement