இலங்கையிலும் இந்தியாவிலும் பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியாளர்கள் இழைத்த அநீதிகள் அட்டுழியங்களிற்கு இன்னமும் நீதி வழங்கப்படாத நிலையில் பிரிட்டன் இலங்கைக்கு எதிராக மனித உரிமை தடைகளை விதிக்கின்றது என முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரிட்டன் தனது கடந்த கால செயற்பாடுகளிற்காக மன்னிப்பு கோரவில்லை என தெரிவித்துள்ள அவர்,
காசா, சிரியா, ஆப்கானிஸ்தான், லிபியா போன்ற பகுதிகளில் இடம்பெறும் விடயங்கள் குறித்து ஏன் பிரிட்டன் மௌனமாக உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மேற்கத்திய நாடுகளான பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், அந்நாடுகளின் அரசயில்வாதிகள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதாகவும் கரண்ணாகொட குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை இராணுவத் தலைவர்களுக்கு எதிராக தடைகளை விதிக்கவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் இவர்களால் நிதி திரட்டப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை அரசு தனது இராணுவத் தலைவர்களை ஆதரிக்க வேண்டும் எனவும் இவ்வகையான வெளிநாட்டுத் தடைகளை உறுதியாக எதிர்க்க வேண்டும் என்றும் கரண்ணாகொட வலியுறுத்தினார்.
இலங்கை இராணுவத் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த நிதி திரட்டும் புலி ஆதரவாளர்கள் வசந்த கரனாகொட குற்றச்சாட்டு இலங்கையிலும் இந்தியாவிலும் பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியாளர்கள் இழைத்த அநீதிகள் அட்டுழியங்களிற்கு இன்னமும் நீதி வழங்கப்படாத நிலையில் பிரிட்டன் இலங்கைக்கு எதிராக மனித உரிமை தடைகளை விதிக்கின்றது என முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட தெரிவித்துள்ளார்.ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். பிரிட்டன் தனது கடந்த கால செயற்பாடுகளிற்காக மன்னிப்பு கோரவில்லை என தெரிவித்துள்ள அவர்,காசா, சிரியா, ஆப்கானிஸ்தான், லிபியா போன்ற பகுதிகளில் இடம்பெறும் விடயங்கள் குறித்து ஏன் பிரிட்டன் மௌனமாக உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், மேற்கத்திய நாடுகளான பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், அந்நாடுகளின் அரசயில்வாதிகள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதாகவும் கரண்ணாகொட குற்றம் சுமத்தியுள்ளார்.இலங்கை இராணுவத் தலைவர்களுக்கு எதிராக தடைகளை விதிக்கவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் இவர்களால் நிதி திரட்டப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், இலங்கை அரசு தனது இராணுவத் தலைவர்களை ஆதரிக்க வேண்டும் எனவும் இவ்வகையான வெளிநாட்டுத் தடைகளை உறுதியாக எதிர்க்க வேண்டும் என்றும் கரண்ணாகொட வலியுறுத்தினார்.