• Oct 06 2024

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மனம் திறந்த மஹிந்த..!

Chithra / Jul 7th 2024, 7:57 am
image

Advertisement

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என அதன் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரபல வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தது தொடர்பில் மகிந்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இதன்போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், ஜனாதிபதி வேட்பாளர் குறித்த கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.

தங்களது கட்சி இதுவரையில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் வேட்பாளர் தொடர்பில் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மனம் திறந்த மஹிந்த.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என அதன் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.பிரபல வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தது தொடர்பில் மகிந்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.இதன்போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.மேலும் கூறுகையில், ஜனாதிபதி வேட்பாளர் குறித்த கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.தங்களது கட்சி இதுவரையில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறாயினும் வேட்பாளர் தொடர்பில் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement