• Sep 20 2024

மகிந்த ராஜபக்ச எடுத்த சரியான தீர்மானம் - ஆளும் கட்சி கூட்டத்தில் நன்றி கூறிய ரணில்

Chithra / Jul 31st 2024, 8:38 am
image

Advertisement

 

நாட்டை கட்டியெழுப்ப முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எடுத்த சரியான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்ப ஆதரவளிக்குமாறு தான் முதலில் கோரியதாகவும், அன்றைய தினம் அவர் எடுத்த சரியான தீர்மானத்திற்கே நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு நாடு பாரிய அரசியல் மற்றும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த போது, ​​நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை தாம் மட்டும் ஏற்கவில்லை.

நாட்டை நேசிக்கும் திறமையான குழுவினரே தன்னுடன் இணைந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவர்கள் தமது பொறுப்பை சரியாக நிறைவேற்றியதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அந்த குழுவினால் மட்டுமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என நாட்டு மக்கள் தற்போது நம்புவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.


மகிந்த ராஜபக்ச எடுத்த சரியான தீர்மானம் - ஆளும் கட்சி கூட்டத்தில் நன்றி கூறிய ரணில்  நாட்டை கட்டியெழுப்ப முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எடுத்த சரியான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.நாட்டைக் கட்டியெழுப்ப ஆதரவளிக்குமாறு தான் முதலில் கோரியதாகவும், அன்றைய தினம் அவர் எடுத்த சரியான தீர்மானத்திற்கே நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.2022ஆம் ஆண்டு நாடு பாரிய அரசியல் மற்றும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த போது, ​​நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை தாம் மட்டும் ஏற்கவில்லை.நாட்டை நேசிக்கும் திறமையான குழுவினரே தன்னுடன் இணைந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவர்கள் தமது பொறுப்பை சரியாக நிறைவேற்றியதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.அந்த குழுவினால் மட்டுமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என நாட்டு மக்கள் தற்போது நம்புவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement