முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சலுகைகளைப் பறித்து, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் உலகளாவிய ஊழல் வலையமைப்பைக் ராஜபக்ஷ குடும்பமே கட்டுப்படுத்துகிறது. அவர்களின் சலுகைகளைப் பறித்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
தான் நீதி அமைச்சராக இருந்தால், மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்து எடுத்துச் சென்ற பெறுமதியான பொருட்களை 24 மணி நேரத்திற்குள் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்வேன்.
2009 இறுதி யுத்தத்தின்போது வேலுப்பிள்ளை பிரபாகரனை தப்பிக்கச் செய்வதற்காக போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு பணிப்புரை விடுத்து 4000க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கொல்லப்படுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ வழியேற்படுத்திக் கொடுத்து தேசத்துரோகம் இழைத்துள்ளார்.
2005 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற விடுதலைப்புலிகளுக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொடுத்தார்.
என்னுடன் பணியாற்றிய 35 உயர் இராணுவ அதிகாரிகள் ஓய்வூதியமின்றி சேவையிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க வேண்டாமென ராஜபக்ஷக்கள் நிறுவனங்களை அச்சுறுத்தினர்.
நாங்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடுகிறோம், ஆனால் அவர் அவர்களுக்கு பணம் கொடுக்கிறார்.
எமது அரசியலமைப்பின் படி, அவருக்குரிய தண்டனை தூக்குத் தண்டனையே வழங்க வேண்டும். இந்த அரசாங்கத்துக்கு துணிவிருந்தால் அது தொடர்பில் மீள விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மஹிந்தவுக்கு தூக்கு தண்டனை வேண்டும் கைது செய்து விசாரணை செய்யுங்கள் - சரத் பொன்சேகா ஆவேசம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சலுகைகளைப் பறித்து, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.நாட்டில் நிலவும் உலகளாவிய ஊழல் வலையமைப்பைக் ராஜபக்ஷ குடும்பமே கட்டுப்படுத்துகிறது. அவர்களின் சலுகைகளைப் பறித்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.தான் நீதி அமைச்சராக இருந்தால், மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்து எடுத்துச் சென்ற பெறுமதியான பொருட்களை 24 மணி நேரத்திற்குள் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்வேன்.2009 இறுதி யுத்தத்தின்போது வேலுப்பிள்ளை பிரபாகரனை தப்பிக்கச் செய்வதற்காக போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு பணிப்புரை விடுத்து 4000க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கொல்லப்படுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ வழியேற்படுத்திக் கொடுத்து தேசத்துரோகம் இழைத்துள்ளார். 2005 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற விடுதலைப்புலிகளுக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொடுத்தார்.என்னுடன் பணியாற்றிய 35 உயர் இராணுவ அதிகாரிகள் ஓய்வூதியமின்றி சேவையிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க வேண்டாமென ராஜபக்ஷக்கள் நிறுவனங்களை அச்சுறுத்தினர். நாங்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடுகிறோம், ஆனால் அவர் அவர்களுக்கு பணம் கொடுக்கிறார்.எமது அரசியலமைப்பின் படி, அவருக்குரிய தண்டனை தூக்குத் தண்டனையே வழங்க வேண்டும். இந்த அரசாங்கத்துக்கு துணிவிருந்தால் அது தொடர்பில் மீள விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.