• Sep 08 2024

முக்கிய கலந்தாலோசனைக்காக இன்று கூடும் மகிந்தவின் கட்சி

Chithra / Jun 7th 2024, 10:13 am
image

Advertisement

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  நிறைவேற்று சபையும் அரசியல் சபையும் இன்று கூடவுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்த சந்திப்பு கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியலமைப்பில் திருத்தம் செய்து, கட்சிக்குள் முக்கிய நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு திட்டம் வகுக்கப்பட்டவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் கலந்தாலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.

முன்னதாக எதிர்வரும் 15ஆம் திகதியளவில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றும், இதனையடுத்து 16ஆம் திகதியில் தமது கட்சி நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய கலந்தாலோசனைக்காக இன்று கூடும் மகிந்தவின் கட்சி  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  நிறைவேற்று சபையும் அரசியல் சபையும் இன்று கூடவுள்ளதாக அறியமுடிகின்றது.இந்த சந்திப்பு கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது.இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியலமைப்பில் திருத்தம் செய்து, கட்சிக்குள் முக்கிய நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு திட்டம் வகுக்கப்பட்டவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் கலந்தாலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.முன்னதாக எதிர்வரும் 15ஆம் திகதியளவில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றும், இதனையடுத்து 16ஆம் திகதியில் தமது கட்சி நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement