• Sep 20 2024

சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பில் இன்று முக்கிய கூட்டம்...!

Sharmi / Aug 1st 2024, 10:56 am
image

Advertisement

ஜனாதிபதி தேர்தலுக்கு தென்னிலங்கை கட்சிகள் பெருமெடுப்பில் தயாராகி வருகின்ற நிலையில்,  ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கூட்டமொன்று இன்றையதினம்(01) கொழும்பில்  நடைபெறவுள்ளது.

இதற்காக ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேம தாச தலைமையில் நடைபெறவுள்ள இந்த விசேட கூட்டத்தில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும், ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பில் இன்று முக்கிய கூட்டம். ஜனாதிபதி தேர்தலுக்கு தென்னிலங்கை கட்சிகள் பெருமெடுப்பில் தயாராகி வருகின்ற நிலையில்,  ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கூட்டமொன்று இன்றையதினம்(01) கொழும்பில்  நடைபெறவுள்ளது.இதற்காக ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேம தாச தலைமையில் நடைபெறவுள்ள இந்த விசேட கூட்டத்தில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும், ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement