இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகர் H. E. பத்லி ஹிஷாம் ஆதம் திருகோணமலை கிண்ணியாவுக்கு இன்றையதினம்(09) விஜயம் செய்தார்.
அங்கு கிண்ணியா அல் மினா மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் அனுசரணையுடன் வழங்கப்பட்ட, அவசர தேவையுள்ள 122 மாணவர்களுக்கு இந்த உபகரணத் தொகுதியை வழங்கி வைத்தார்.
பாடசாலையின் அதிபர் எம்.வை ஹதியத்துள்ளா தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவருமான T.L.M. நௌஸாத், ஸ்ரீலங்கா முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் A.C. பைஸர்கான், தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் நவாஸ் பாறூக் மற்றும் கிண்ணியா வலயக்கல்விப் பணிப்பாளர் முனவ்வரா நளீம் ஆகியோர் அதீதிகளாக கலந்து கொண்டனர்.
இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் திருமலைக்கு விஜயம். இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகர் H. E. பத்லி ஹிஷாம் ஆதம் திருகோணமலை கிண்ணியாவுக்கு இன்றையதினம்(09) விஜயம் செய்தார்.அங்கு கிண்ணியா அல் மினா மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் அனுசரணையுடன் வழங்கப்பட்ட, அவசர தேவையுள்ள 122 மாணவர்களுக்கு இந்த உபகரணத் தொகுதியை வழங்கி வைத்தார்.பாடசாலையின் அதிபர் எம்.வை ஹதியத்துள்ளா தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவருமான T.L.M. நௌஸாத், ஸ்ரீலங்கா முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் A.C. பைஸர்கான், தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் நவாஸ் பாறூக் மற்றும் கிண்ணியா வலயக்கல்விப் பணிப்பாளர் முனவ்வரா நளீம் ஆகியோர் அதீதிகளாக கலந்து கொண்டனர்.