• Sep 20 2024

விடுதலைப் புலிகளின் தங்கம் மற்றும் பணத்தை தேடிய நபர் கைது! இருவர் தப்பியோட்டம்

Chithra / Aug 21st 2024, 2:53 pm
image

Advertisement

 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கம் மற்றும் பணத்தை தேடிய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஓமந்த பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 54 வயதுடைய ஓமந்த பிரதேசத்தை சேர்ந்தவரென தெரிவித்துள்ளனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் ஸ்கேனருடன் கைதுசெய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளர்.

சோதனையின் போது, மேலும் இரண்டு சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாகவும் தப்பி சென்றவர்களை தீவிரமாக தேடிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் அந்த சந்தேக நபர்களுக்கு சொந்தமான கையடக்க தொலைபேசி, மோட்டார் சைக்கிள் மற்றும் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் தங்கம் மற்றும் பணத்தை தேடிய நபர் கைது இருவர் தப்பியோட்டம்  தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கம் மற்றும் பணத்தை தேடிய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஓமந்த பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 54 வயதுடைய ஓமந்த பிரதேசத்தை சேர்ந்தவரென தெரிவித்துள்ளனர்.இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் ஸ்கேனருடன் கைதுசெய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளர்.சோதனையின் போது, மேலும் இரண்டு சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாகவும் தப்பி சென்றவர்களை தீவிரமாக தேடிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் அந்த சந்தேக நபர்களுக்கு சொந்தமான கையடக்க தொலைபேசி, மோட்டார் சைக்கிள் மற்றும் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement