• Sep 20 2024

திருநெல்வேலியில் போலி இயந்திர நாணயத் தாளுடன் நபர் ஒருவர் கைது!

Tamil nila / Jun 8th 2024, 6:56 pm
image

Advertisement

போலி இயந்திர நாணயத் தாளுடன் நபர்   ஒருவரை கோப்பாய் பொலிசார் நேற்றைய தினம் திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது..

கடந்த வியாழக்கிழமை கொழும்பிலிருந்து தனது குடும்பத்துடன் நபர்   ஒருவர் அரியாலை பகுதிக்கு வருகை  தந்து வீடொன்றினை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளார். 

இந்நிலையில் நேற்றைய தினம் திருநெல்வேலி பகுதியில் வெற்று தாள்களையும் போலி இயந்திரத்தினையும்  விற்பனை செய்ய முயன்ற பொழுது கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சந்தேகநபரை கைது செய்ததோடு சான்று பொருட்களையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து சந்தேகநபர் தங்கியிருந்த வீட்டிற்கு சோதனையிட முற்பட்ட நிலையில் வீட்டிலிருந்த குடும்பத்தினர் தப்பிசென்றிருந்தமை தெரியவந்தது.

தொடர்ந்து குறித்த நபருக்கு எதிராக யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலியில் போலி இயந்திர நாணயத் தாளுடன் நபர் ஒருவர் கைது போலி இயந்திர நாணயத் தாளுடன் நபர்   ஒருவரை கோப்பாய் பொலிசார் நேற்றைய தினம் திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இது குறித்து மேலும் தெரிய வருவதாவது.கடந்த வியாழக்கிழமை கொழும்பிலிருந்து தனது குடும்பத்துடன் நபர்   ஒருவர் அரியாலை பகுதிக்கு வருகை  தந்து வீடொன்றினை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் திருநெல்வேலி பகுதியில் வெற்று தாள்களையும் போலி இயந்திரத்தினையும்  விற்பனை செய்ய முயன்ற பொழுது கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சந்தேகநபரை கைது செய்ததோடு சான்று பொருட்களையும் கைப்பற்றினர்.இதனையடுத்து சந்தேகநபர் தங்கியிருந்த வீட்டிற்கு சோதனையிட முற்பட்ட நிலையில் வீட்டிலிருந்த குடும்பத்தினர் தப்பிசென்றிருந்தமை தெரியவந்தது.தொடர்ந்து குறித்த நபருக்கு எதிராக யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement