மஹியங்கனை பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒருபடிவெவ அரவத்த மஹியங்கனை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்ட போது துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சந்தேகநபரை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.