• May 19 2024

மனைவியின் சகோதரனை கோடரியால் தாக்கி கொடூரமாக கொன்ற நபர்..!

Chithra / Jan 3rd 2024, 3:39 pm
image

Advertisement


தனது மனைவியின் 63 வயதுடைய மூத்த சகோதரனை கோடரியால் தலையில் தாக்கி கொன்ற நபர் கோடரியுடன் பொலிஸில் சரணடைந்ததாக ஹிடோகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹிடோகம பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய திருமணமான ஒருவரே பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். 

ஹிடோகம பிரதேசத்தை சேர்ந்த 63 வயதான பியதாசகே ஜயசேன என்ற திருமணமான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்

உயிரிழந்தவரும் சந்தேக நபரும் ஒரே வீட்டில் வசிக்கும் இருவர் எனவும்,

சந்தேகநபர் உயிரிழந்தவரின் சகோதரியை திருமணம் செய்து கொண்டு மத்திய கிழக்கில் பணிபுரிந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சந்தேக நபரை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதால், 

நேற்று முன்தினம் (02) இரவு வீட்டுக்குள் இருந்த சந்தேக நபர் கோடரியால் உயிரிழந்தவரின் தலையில் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் நெலுபேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மனைவியின் சகோதரனை கோடரியால் தாக்கி கொடூரமாக கொன்ற நபர். தனது மனைவியின் 63 வயதுடைய மூத்த சகோதரனை கோடரியால் தலையில் தாக்கி கொன்ற நபர் கோடரியுடன் பொலிஸில் சரணடைந்ததாக ஹிடோகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.ஹிடோகம பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய திருமணமான ஒருவரே பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். ஹிடோகம பிரதேசத்தை சேர்ந்த 63 வயதான பியதாசகே ஜயசேன என்ற திருமணமான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்உயிரிழந்தவரும் சந்தேக நபரும் ஒரே வீட்டில் வசிக்கும் இருவர் எனவும்,சந்தேகநபர் உயிரிழந்தவரின் சகோதரியை திருமணம் செய்து கொண்டு மத்திய கிழக்கில் பணிபுரிந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் சந்தேக நபரை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதால், நேற்று முன்தினம் (02) இரவு வீட்டுக்குள் இருந்த சந்தேக நபர் கோடரியால் உயிரிழந்தவரின் தலையில் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் நெலுபேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement