• Oct 06 2024

குளவி கொட்டுக்கு இலக்கான நபர் பரிதாப மரணம்

Chithra / May 28th 2024, 10:06 am
image

Advertisement

 

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லபெத்த பிட்டகொலகம பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி  ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று  மாலை   இடம்பெற்றுள்ளது.

மில்லபெத்த, பிட்டகொலகம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த நபர் தனது தோட்டத்தில் மிளகு பறிப்பதற்காக மரம் ஒன்றில் ஏறி மிளகு பறித்து கொண்டு இருந்த போது  குளவி கூடு கலைந்து குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இந்நிலையில், ஹொப்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மரணித்த நபரின் சடலம் லுணுகலை ஹொப்டன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியரட்ண தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

குளவி கொட்டுக்கு இலக்கான நபர் பரிதாப மரணம்  பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லபெத்த பிட்டகொலகம பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி  ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் நேற்று  மாலை   இடம்பெற்றுள்ளது.மில்லபெத்த, பிட்டகொலகம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த நபர் தனது தோட்டத்தில் மிளகு பறிப்பதற்காக மரம் ஒன்றில் ஏறி மிளகு பறித்து கொண்டு இருந்த போது  குளவி கூடு கலைந்து குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.இந்நிலையில், ஹொப்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.மரணித்த நபரின் சடலம் லுணுகலை ஹொப்டன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியரட்ண தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement