• Sep 20 2024

25 மீற்றர் உயரமான தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

Chithra / Aug 1st 2024, 12:39 pm
image

Advertisement


25 மீற்றர் உயரமான தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த நபர் ஒருவர் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹெட்டிமுல்ல, நுககஹ வீதி பிரதேசத்தில் தென்னம் பூ வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கொஸ் வாடியா மஹா வேவ பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஜயலத் பேடி அன்டனி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நபர் நேற்று (31) மாலை தென்னந்தோப்பில் தென்னம் பூ வெட்டும் தொழிலில் ஈடுபட்ருக்கும்போதே இவ்வாறு கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தென்னந்தோப்பு உரிமையாளர் மற்றும் மரண விசாரணை அதிகாரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

25 மீற்றர் உயரமான தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு 25 மீற்றர் உயரமான தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த நபர் ஒருவர் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.ஹெட்டிமுல்ல, நுககஹ வீதி பிரதேசத்தில் தென்னம் பூ வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் கொஸ் வாடியா மஹா வேவ பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஜயலத் பேடி அன்டனி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த நபர் நேற்று (31) மாலை தென்னந்தோப்பில் தென்னம் பூ வெட்டும் தொழிலில் ஈடுபட்ருக்கும்போதே இவ்வாறு கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தென்னந்தோப்பு உரிமையாளர் மற்றும் மரண விசாரணை அதிகாரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement