• Feb 12 2025

கல்முனையில் கேரளா கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்..!

Sharmi / Feb 12th 2025, 9:26 am
image

கேரளக் கஞ்சா 18 கிலோ 169 கிராமை  வீட்டில் உள்ள கட்டிலின் கீழ்  சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த சந்தேக நபரை  07 நாட்கள்  தடுப்புக்காவலில் வைத்து  விசாரணை மேற்கொள்வதற்கு  கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை(10)   கல்முனை விசேட அதிரடிப்படையினரால் 18 கிலோ 169 கிராம்  கேரளக் கஞ்சாவுடன் 33 வயது சந்தேக நபர் கைதாகிய நிலையில் நேற்றையதினம்(11) கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

இதன்போது, கல்முனை நீதிமன்ற நீதிவான் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18 ஆந் திகதி 07 நாட்கள்  தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

செய்தி பின்னணி

50 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய கேரளா கஞ்சாவினை சூட்சுமமாக கட்டிலின் கீழ் பதுக்கி வைத்திருந்த சந்தேக நபரை கடந்த   திங்கட்கிழமை (10) மாலை  கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த  தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் போது கடந்த   புதன்கிழமை(5)  பெருந்தொகையான கேரளா கஞ்சா மற்றும் ஒரு தொகை பணத்துடன்  கல்முனை விசேட அதிரடிப்படையினர் இரு வேறு  சந்தர்ப்பங்களில்   கைதான இரு  சந்தேக நபர்களிடம்   தடுப்புகாவலில் வைத்து விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினர்  மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பிரகாரம் இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

இத்தேடுதலில் 33 வயது மதிக்கத்தக்க ஒராபி பாஸா வீதியை சேர்ந்த நபரொருவர் சந்தேகத்தில்  கைது செய்யப்பட்டுள்துடன் 18 கிலோ 169 கிராம் கேரளக் கஞ்சாவும் வீட்டில் உள்ள   கட்டிலின் கீழ் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில்   மீட்கப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைதான  சந்தேக நபர் உட்பட 50 இலட்சத்திற்கும் பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும்  சான்றுப் பொருள்கள் யாவும்  சட்ட நடவடிக்கைக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி சட்டத்தரணி  பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய, அம்பாறை வலயக் கட்டளை பதில் அதிகாரி  பொலிஸ் அத்தியட்சகர்  குணசிறியின்  அறிவுறுத்தலுக்கமைய  மட்டக்களப்பு வலய  உதவி பொலிஸ் அத்தியட்சகர்   சம்பத்  ஆகியோரின் வழிகாட்டலில்    கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்  ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க மேற்பார்வையில் விசேட  அதிரடிப்படை  அதிகாரிகள்  இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கல்முனையில் கேரளா கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவருக்கு விளக்கமறியல். கேரளக் கஞ்சா 18 கிலோ 169 கிராமை  வீட்டில் உள்ள கட்டிலின் கீழ்  சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த சந்தேக நபரை  07 நாட்கள்  தடுப்புக்காவலில் வைத்து  விசாரணை மேற்கொள்வதற்கு  கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.கடந்த திங்கட்கிழமை(10)   கல்முனை விசேட அதிரடிப்படையினரால் 18 கிலோ 169 கிராம்  கேரளக் கஞ்சாவுடன் 33 வயது சந்தேக நபர் கைதாகிய நிலையில் நேற்றையதினம்(11) கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.இதன்போது, கல்முனை நீதிமன்ற நீதிவான் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18 ஆந் திகதி 07 நாட்கள்  தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.செய்தி பின்னணி50 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய கேரளா கஞ்சாவினை சூட்சுமமாக கட்டிலின் கீழ் பதுக்கி வைத்திருந்த சந்தேக நபரை கடந்த   திங்கட்கிழமை (10) மாலை  கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த  தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இதன் போது கடந்த   புதன்கிழமை(5)  பெருந்தொகையான கேரளா கஞ்சா மற்றும் ஒரு தொகை பணத்துடன்  கல்முனை விசேட அதிரடிப்படையினர் இரு வேறு  சந்தர்ப்பங்களில்   கைதான இரு  சந்தேக நபர்களிடம்   தடுப்புகாவலில் வைத்து விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினர்  மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பிரகாரம் இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.இத்தேடுதலில் 33 வயது மதிக்கத்தக்க ஒராபி பாஸா வீதியை சேர்ந்த நபரொருவர் சந்தேகத்தில்  கைது செய்யப்பட்டுள்ளதுடன் 18 கிலோ 169 கிராம் கேரளக் கஞ்சாவும் வீட்டில் உள்ள   கட்டிலின் கீழ் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில்   மீட்கப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.மேலும் கைதான  சந்தேக நபர் உட்பட 50 இலட்சத்திற்கும் பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும்  சான்றுப் பொருள்கள் யாவும்  சட்ட நடவடிக்கைக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி சட்டத்தரணி  பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய, அம்பாறை வலயக் கட்டளை பதில் அதிகாரி  பொலிஸ் அத்தியட்சகர்  குணசிறியின்  அறிவுறுத்தலுக்கமைய  மட்டக்களப்பு வலய  உதவி பொலிஸ் அத்தியட்சகர்   சம்பத்  ஆகியோரின் வழிகாட்டலில்    கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்  ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க மேற்பார்வையில் விசேட  அதிரடிப்படை  அதிகாரிகள்  இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement