• Sep 17 2024

மட்டக்களப்பில் நித்திரையில் இருந்த சிறுவனை கடத்தி சென்ற நபர்- சுற்றிவளைத்து நையப்புடைத்த மக்கள்!

Tamil nila / Aug 17th 2024, 7:35 pm
image

Advertisement

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இன்று (17) அதிகாலை  வீடு ஒன்றில் நித்திரையில் இருந்த 5 வயது சிறுவனை  ஒருவர், கடத்தி காட்டுக்குள் கொண்டு சென்ற நிலையில், பிரதேச மக்கள் சிறுவனை மீட்டதுடன் கடத்திய நபரை மடக்கி பிடித்து நையப்புடைத்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம்  இடம் பெற்றுள்ளது.

வாகரை 5ம் வட்டாரத்தைச் சோந்த 5 வயதுடைய சிறுவன், தாய் தந்தையுடன் நித்திரையில் இருந்த நிலையில், சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் குறித்த  சிறுவன் பால் கேட்டதையடுத்து  தாயார் தந்தைக்கு பக்கத்தில் சிறுவனை படுக்க வைத்துவிட்டு சமையலறைக்கு சென்றுள்ளார்.

பின்னர் பால் போத்துலுடன் திரும்பி வந்தபோது நித்திரையில் இருந்த குழந்தையை காணாததையடுத்து அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு குழந்தையை தேடினர்.

இதன் போது குழந்தையை கடத்தல்காரன் ஒருவர் கடத்திக் கொண்டு காட்டுப் பகுதிக்கு செல்வதை கண்ட மக்கள் காட்டை சுற்றி தேடிய நிலையில், குழந்தையை காட்டில் விட்டுவிட்டு கடத்தல்காரன் அந்த பகுதியில் ஒளிந்திருந்த நிலையில், அவனை பொதுமக்கள் மடக்கி பிடித்து நையப்புடைத்து பொலிசாரிடம் ஒப்படைத்ததுடன் குழந்தையை மீட்டனர்.

குறித்த இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் கைது செய்யப்பட்ட கடத்தல்காரன் வாழைச்சேனை செம்மண் ஓடை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவன் எனவும் போதை பொருளுக்கு அடிமையானவன் எனவும் பல திருட்டுச் சம்பவங்களில்  தொடர்புடையவர் என்பதுடன் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி பட்டியில் சேர்க்கப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

போதைப்பொருளை கொள்வனவு செய்வதற்காக  குழந்தையை கடத்தி கப்பம் பெற இருந்துள்ளார் எனவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவரை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 23ம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

 

மட்டக்களப்பில் நித்திரையில் இருந்த சிறுவனை கடத்தி சென்ற நபர்- சுற்றிவளைத்து நையப்புடைத்த மக்கள் மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இன்று (17) அதிகாலை  வீடு ஒன்றில் நித்திரையில் இருந்த 5 வயது சிறுவனை  ஒருவர், கடத்தி காட்டுக்குள் கொண்டு சென்ற நிலையில், பிரதேச மக்கள் சிறுவனை மீட்டதுடன் கடத்திய நபரை மடக்கி பிடித்து நையப்புடைத்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம்  இடம் பெற்றுள்ளது.வாகரை 5ம் வட்டாரத்தைச் சோந்த 5 வயதுடைய சிறுவன், தாய் தந்தையுடன் நித்திரையில் இருந்த நிலையில், சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் குறித்த  சிறுவன் பால் கேட்டதையடுத்து  தாயார் தந்தைக்கு பக்கத்தில் சிறுவனை படுக்க வைத்துவிட்டு சமையலறைக்கு சென்றுள்ளார்.பின்னர் பால் போத்துலுடன் திரும்பி வந்தபோது நித்திரையில் இருந்த குழந்தையை காணாததையடுத்து அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு குழந்தையை தேடினர்.இதன் போது குழந்தையை கடத்தல்காரன் ஒருவர் கடத்திக் கொண்டு காட்டுப் பகுதிக்கு செல்வதை கண்ட மக்கள் காட்டை சுற்றி தேடிய நிலையில், குழந்தையை காட்டில் விட்டுவிட்டு கடத்தல்காரன் அந்த பகுதியில் ஒளிந்திருந்த நிலையில், அவனை பொதுமக்கள் மடக்கி பிடித்து நையப்புடைத்து பொலிசாரிடம் ஒப்படைத்ததுடன் குழந்தையை மீட்டனர்.குறித்த இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் கைது செய்யப்பட்ட கடத்தல்காரன் வாழைச்சேனை செம்மண் ஓடை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவன் எனவும் போதை பொருளுக்கு அடிமையானவன் எனவும் பல திருட்டுச் சம்பவங்களில்  தொடர்புடையவர் என்பதுடன் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி பட்டியில் சேர்க்கப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.போதைப்பொருளை கொள்வனவு செய்வதற்காக  குழந்தையை கடத்தி கப்பம் பெற இருந்துள்ளார் எனவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் கைது செய்யப்பட்டவரை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 23ம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

Advertisement

Advertisement

Advertisement