• Jun 26 2025

ஈழத்தமிழரை கைவிட்டது போன்று மலையக தமிழரையும் கைவிடாதீர்கள்! ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் மனோ கணேசன் கோரிக்கை!

Chithra / Jun 26th 2025, 10:34 am
image

 

ஈழத்தமிழ் மக்களை கைவிட்டதை போன்று, இந்நாட்டில் வாழும் மலையக தமிழ் மக்களையும் நீங்கள் கைவிட்டு விட வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஐ.நா மனித உரிமை ஆணையர் வோல்கர் டர்க்கிடம் தெரிவித்தார்.  

ஐ.நா மனித உரிமை ஆணையர் வோல்கர் டர்க்கிற்கும், எதிர்கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

கடும் யுத்தம் நடந்த போது ஐ.நா சபை வடக்கில் இருந்து முன்னறிவித்தல் இல்லாமல் வெளியேறி, அங்கே சாட்சியம் இல்லாத யுத்தம் நடக்க காரணமாக அமைந்து விட்டது.

இன்று யுத்தம் முடிந்து 15 வருடங்கள் ஆகியும், கொலையானோர், காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்பு கூறல் நடைபெறவில்லை. 

அரசியல் கைதிகள் பிரச்சினை முழுமையாக முடிவுக்கு வரவில்லை. 

ஆகவேதான், ஈழத்தமிழ் உடன் பிறப்புகள் ஐ.நா சபை தங்களை கைவிட்டு விட்டதாக நினைக்கிறார்கள். ஈழத்தமிழ் மக்களை கைவிட்டதை போன்று, இந்நாட்டில் வாழும் மலையக தமிழ் மக்களையும் நீங்கள் கைவிட்டு விட வேண்டாம்.

காணி உரிமை, வீட்டு உரிமை, வறுமை, சிசு மரணம், சுகாதாரம், தொழில் நிலைமைகள் என்ற எதுவாக இருந்தாலும், அவை அனைத்திலும் மிகவும் குறை வளர்ச்சி கொண்ட மக்களாக இலங்கையில் வாழும்  இந்திய வம்சாவளி மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள், இருக்கிறார்கள்.என தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழரை கைவிட்டது போன்று மலையக தமிழரையும் கைவிடாதீர்கள் ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் மனோ கணேசன் கோரிக்கை  ஈழத்தமிழ் மக்களை கைவிட்டதை போன்று, இந்நாட்டில் வாழும் மலையக தமிழ் மக்களையும் நீங்கள் கைவிட்டு விட வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஐ.நா மனித உரிமை ஆணையர் வோல்கர் டர்க்கிடம் தெரிவித்தார்.  ஐ.நா மனித உரிமை ஆணையர் வோல்கர் டர்க்கிற்கும், எதிர்கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.இதன்போது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,கடும் யுத்தம் நடந்த போது ஐ.நா சபை வடக்கில் இருந்து முன்னறிவித்தல் இல்லாமல் வெளியேறி, அங்கே சாட்சியம் இல்லாத யுத்தம் நடக்க காரணமாக அமைந்து விட்டது.இன்று யுத்தம் முடிந்து 15 வருடங்கள் ஆகியும், கொலையானோர், காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்பு கூறல் நடைபெறவில்லை. அரசியல் கைதிகள் பிரச்சினை முழுமையாக முடிவுக்கு வரவில்லை. ஆகவேதான், ஈழத்தமிழ் உடன் பிறப்புகள் ஐ.நா சபை தங்களை கைவிட்டு விட்டதாக நினைக்கிறார்கள். ஈழத்தமிழ் மக்களை கைவிட்டதை போன்று, இந்நாட்டில் வாழும் மலையக தமிழ் மக்களையும் நீங்கள் கைவிட்டு விட வேண்டாம்.காணி உரிமை, வீட்டு உரிமை, வறுமை, சிசு மரணம், சுகாதாரம், தொழில் நிலைமைகள் என்ற எதுவாக இருந்தாலும், அவை அனைத்திலும் மிகவும் குறை வளர்ச்சி கொண்ட மக்களாக இலங்கையில் வாழும்  இந்திய வம்சாவளி மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள், இருக்கிறார்கள்.என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement