மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் தென்னம் தோப்பிலிருந்து ஆணின் சடலம் இன்று (13 ) மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தார்.
சடலமாக மீட்கப்பட்டவர் குருக்கள்மடம் கிராமத்தைச் சேர்ந்த 81 வயதுடைய கதிர்காமத்தம்பி சேமசுந்தரம் என அடையாம் காணப்பட்டுள்ளார்
குருக்கள்மடம் தென்னம் தோப்பில் ஆண் ஒருவரின் கடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் களுவாஞ்சிகுடி பொலிசாருக்கு வழங்கிய தகவலுக்குகமைய குறித்த பகுதிக்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர்.
களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்னற நீதிபதி ரி.பிரதீபனின் உத்தரவுக்கமைய அங்கு விஜயம் செய்த களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பதப்பிள்ளை ஜீவரெத்தினம் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்காகு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குருக்கள் மடத்தில் ஆணின் சடலம் மீட்பு மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் தென்னம் தோப்பிலிருந்து ஆணின் சடலம் இன்று (13 ) மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தார்.சடலமாக மீட்கப்பட்டவர் குருக்கள்மடம் கிராமத்தைச் சேர்ந்த 81 வயதுடைய கதிர்காமத்தம்பி சேமசுந்தரம் என அடையாம் காணப்பட்டுள்ளார்குருக்கள்மடம் தென்னம் தோப்பில் ஆண் ஒருவரின் கடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் களுவாஞ்சிகுடி பொலிசாருக்கு வழங்கிய தகவலுக்குகமைய குறித்த பகுதிக்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர்.களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்னற நீதிபதி ரி.பிரதீபனின் உத்தரவுக்கமைய அங்கு விஜயம் செய்த களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பதப்பிள்ளை ஜீவரெத்தினம் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்காகு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.