• Sep 08 2024

பட்ஜெட்டில் பல மாநிலங்கள் புறக்கணிப்பு - நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி போராட்டம்

Tharun / Jul 24th 2024, 7:13 pm
image

Advertisement

இந்திய மத்திய  நிதி அமைச்சர் சமர்ப்பித்த    பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து  இந்திய கூட்டணி கட்சி எம்.பிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி  வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக  பொறுப்பேற்ற பின் நேற்று முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை ஏழாவது முறையாக  தாக்கல் செய்தார்.

இதில் பல்வேறு வரி சலுகைகள், வரி குறைப்பு தொடர்பான பல அறிவிப்புகளை  வெளியிட்டார்.  அதேசமயம் பீகார், மற்றும் ஆந்திராவிற்கு நிறைய திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த இரண்டு மாநிலங்களுக்குத்தான் அதிக அளவில் நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டது. மேலும் பட்ஜெத் தாக்கலின்போது தமிழ் மற்றும் தமிழ்நாடு என்ற வார்த்தைகள் ஒரு தடவை கூட இடம்பெறவில்லை. தமிழ்நாட்டிற்கு எந்த திட்டங்களும் அறிவிக்கவும் இல்லை. நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை. இது தமிழ்நாட்டிலும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் பட்ஜெட் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மிகப் பெரும் துரோகம் என முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும் நிதி ஆயோக் மாநாட்டை தான் புறக்கணிப்பதாகவும், அவர் அறிவித்தார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது இந்தியா கூட்டணி முதல்வர்களும் புறக்கணிப்பு முடிவை அறிவித்துள்ளனர்.

பட்ஜெட்டில் பல மாநிலங்கள் புறக்கணிப்பு - நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி போராட்டம் இந்திய மத்திய  நிதி அமைச்சர் சமர்ப்பித்த    பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து  இந்திய கூட்டணி கட்சி எம்.பிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி  வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக  பொறுப்பேற்ற பின் நேற்று முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை ஏழாவது முறையாக  தாக்கல் செய்தார்.இதில் பல்வேறு வரி சலுகைகள், வரி குறைப்பு தொடர்பான பல அறிவிப்புகளை  வெளியிட்டார்.  அதேசமயம் பீகார், மற்றும் ஆந்திராவிற்கு நிறைய திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த இரண்டு மாநிலங்களுக்குத்தான் அதிக அளவில் நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டது. மேலும் பட்ஜெத் தாக்கலின்போது தமிழ் மற்றும் தமிழ்நாடு என்ற வார்த்தைகள் ஒரு தடவை கூட இடம்பெறவில்லை. தமிழ்நாட்டிற்கு எந்த திட்டங்களும் அறிவிக்கவும் இல்லை. நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை. இது தமிழ்நாட்டிலும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அரசின் பட்ஜெட் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மிகப் பெரும் துரோகம் என முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும் நிதி ஆயோக் மாநாட்டை தான் புறக்கணிப்பதாகவும், அவர் அறிவித்தார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது இந்தியா கூட்டணி முதல்வர்களும் புறக்கணிப்பு முடிவை அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement