கேரளாவில் 10 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 11வது திருமணத்தில் சிக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,
கேரளா, எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர் ஒருவர், திருமண வரன் தேடி வந்துள்ளார்.
இந்நிலையில் ரேஷ்மா என்னும் பெண்ணுக்கு வரன் பார்த்து வருகிறோம் என்றும், அவளுக்கு உங்களை பிடித்துள்ளதாகவும் பெண் ஒருவர் கூறியுள்ளார்.
பின் ரேஷ்மா அவரை மாலில் சந்தித்து பேசியுள்ளார். தொடர்ந்து இருவரும் செல்போனில் உறவை வளர்த்த நிலையில்இ திடீரென திருமணத்துக்கு தனது தாயார் மறுப்பு தெரிவிப்பதாக ரேஷ்மா கூறியுள்ளார்.
இதனால் எதிர்ப்பை மீறி பஞ்சாயத்து உறுப்பினர் ரேஷ்மாவை திருமணம் செய்ய எண்ணி மணப்பெண்ணை அலங்காரம் செய்து காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, ரேஷ்மா வைத்திருந்த வாக் அவரின் கையில் சிக்கியுள்ளது.
அதில் 45 நாட்களுக்கு முன்பு வேறொரு ஆணுடன் திருமணம் நடைபெற்ற எழுத்து சான்றிதழ் இருந்ததை கண்டு வார்டு உறுப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது தொடர்பில் அவர் முறைப்பாடு வழங்கியதை அடுத்து திருமண மண்டபம் விரைந்த பொலிஸார் ரேஷ்மாவை கைது செய்துள்னர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ரேஷ்மாவுக்கு இரண்டு வயதில் குழந்தை ஒன்று உள்ளதும் மேட்ரிமோனியில் வரன் தேடும் இளைஞர்களை குறிவைத்து மோசடி செய்துள்ளமையும் அம்பலமாகியுள்ளது.
ரேஷ்மா, திருமணம் முடிந்த கையுடன் மணமகளின் வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவாவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதுவரை ரேஷ்மா 10 பேரை ஏமாற்றியுள்ளதும், 7 பேருடன் முறையாக திருமணம் செய்து, அதற்கு உரிய சான்றிதழையும் வைத்துள்ளார்.
அதேவேளை அடுத்த மாதம் 12 ஆவதாக வோறொரு ஆணுடன் திருமணம் செய்ய திட்டமிருந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் திருமணம் செய்து ஆண்களை ஏமாற்றி பெண் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
10 இளைஞர்களை ஏமாற்றி :திருமணம் செய்த பெண்- 11வது திருமணத்தில் சிக்கியது எப்படி. கேரளாவில் 10 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 11வது திருமணத்தில் சிக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,கேரளா, எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர் ஒருவர், திருமண வரன் தேடி வந்துள்ளார். இந்நிலையில் ரேஷ்மா என்னும் பெண்ணுக்கு வரன் பார்த்து வருகிறோம் என்றும், அவளுக்கு உங்களை பிடித்துள்ளதாகவும் பெண் ஒருவர் கூறியுள்ளார்.பின் ரேஷ்மா அவரை மாலில் சந்தித்து பேசியுள்ளார். தொடர்ந்து இருவரும் செல்போனில் உறவை வளர்த்த நிலையில்இ திடீரென திருமணத்துக்கு தனது தாயார் மறுப்பு தெரிவிப்பதாக ரேஷ்மா கூறியுள்ளார்.இதனால் எதிர்ப்பை மீறி பஞ்சாயத்து உறுப்பினர் ரேஷ்மாவை திருமணம் செய்ய எண்ணி மணப்பெண்ணை அலங்காரம் செய்து காரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, ரேஷ்மா வைத்திருந்த வாக் அவரின் கையில் சிக்கியுள்ளது. அதில் 45 நாட்களுக்கு முன்பு வேறொரு ஆணுடன் திருமணம் நடைபெற்ற எழுத்து சான்றிதழ் இருந்ததை கண்டு வார்டு உறுப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளார்.இது தொடர்பில் அவர் முறைப்பாடு வழங்கியதை அடுத்து திருமண மண்டபம் விரைந்த பொலிஸார் ரேஷ்மாவை கைது செய்துள்னர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ரேஷ்மாவுக்கு இரண்டு வயதில் குழந்தை ஒன்று உள்ளதும் மேட்ரிமோனியில் வரன் தேடும் இளைஞர்களை குறிவைத்து மோசடி செய்துள்ளமையும் அம்பலமாகியுள்ளது. ரேஷ்மா, திருமணம் முடிந்த கையுடன் மணமகளின் வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவாவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதுவரை ரேஷ்மா 10 பேரை ஏமாற்றியுள்ளதும், 7 பேருடன் முறையாக திருமணம் செய்து, அதற்கு உரிய சான்றிதழையும் வைத்துள்ளார். அதேவேளை அடுத்த மாதம் 12 ஆவதாக வோறொரு ஆணுடன் திருமணம் செய்ய திட்டமிருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் திருமணம் செய்து ஆண்களை ஏமாற்றி பெண் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது