மத்தள சர்வதேச விமான நிலையத்தால் வருடாந்தம் 3 தசம் 2 பில்லியன் ரூபா நட்டத்தை தொடர்ச்சியாக எதிர்நோக்குவதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நட்டத்தைக் குறைப்பதற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, மத்தள விமான நிலையத்திற்கு வரும் விமானங்களுக்கு தரையிறங்கும் கட்டணத்திலிருந்து விலக்களிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் ஊடாக 06 விமான நிறுவனங்கள் மத்தள விமான நிலையத்தில் தமது விமானங்களை தரையிறக்க இணங்கியுள்ளன.
மத்தள விமான நிலையத்தின் ஊடாக வருடாந்தம் ஒரு லட்சம் பயணிகள் மாத்திரமே வருகைத் தருகின்றனர்.
இந்த வருடம் அந்த எண்ணிக்கையை இரண்டு லட்சமாக அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
மத்தள விமான நிலையத்தைச் சுற்றியுள்ள 17 கிலோமீற்றர் நீளமான பாதுகாப்பு வேலியும் பாவனைக்கு உகந்த நிலையில் இல்லை.
இதனால் விமான நிலையத்தை நவீனமயமாக்கவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்
மத்தள சர்வதேச விமான நிலையத்தால் பெரும் நட்டம் மத்தள சர்வதேச விமான நிலையத்தால் வருடாந்தம் 3 தசம் 2 பில்லியன் ரூபா நட்டத்தை தொடர்ச்சியாக எதிர்நோக்குவதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த நட்டத்தைக் குறைப்பதற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, மத்தள விமான நிலையத்திற்கு வரும் விமானங்களுக்கு தரையிறங்கும் கட்டணத்திலிருந்து விலக்களிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் ஊடாக 06 விமான நிறுவனங்கள் மத்தள விமான நிலையத்தில் தமது விமானங்களை தரையிறக்க இணங்கியுள்ளன.மத்தள விமான நிலையத்தின் ஊடாக வருடாந்தம் ஒரு லட்சம் பயணிகள் மாத்திரமே வருகைத் தருகின்றனர்.இந்த வருடம் அந்த எண்ணிக்கையை இரண்டு லட்சமாக அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.மத்தள விமான நிலையத்தைச் சுற்றியுள்ள 17 கிலோமீற்றர் நீளமான பாதுகாப்பு வேலியும் பாவனைக்கு உகந்த நிலையில் இல்லை.இதனால் விமான நிலையத்தை நவீனமயமாக்கவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்