இலங்கையில் 10 நகரங்களை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டத்திட்டத்திற்கு அமைய - வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக பங்குபற்றினார்களுடன் கலந்துரையாடல் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்றையதினம் பி. ப 03.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் வரவேற்புரையாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கயாழ்ப்பாண நகரை அபிவிருத்தி செய்வது தொடர்பாக பங்குதாரர்களுடன் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டார்.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான எஸ். கபிலன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாணப் பணிப்பாளர், மேலதிக அரச அதிபர் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஆணையாளர், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர்கள், துறைசார்ந்த பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகள், வர்த்தக சங்கத்தினர், பிரதிநிதிகள் என உள்ளிட்ட தரப்பினரும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம், வவுனியாவை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை இலங்கையில் 10 நகரங்களை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டத்திட்டத்திற்கு அமைய - வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக பங்குபற்றினார்களுடன் கலந்துரையாடல் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்றையதினம் பி. ப 03.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் வரவேற்புரையாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கயாழ்ப்பாண நகரை அபிவிருத்தி செய்வது தொடர்பாக பங்குதாரர்களுடன் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டார். இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான எஸ். கபிலன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாணப் பணிப்பாளர், மேலதிக அரச அதிபர் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஆணையாளர், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர்கள், துறைசார்ந்த பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகள், வர்த்தக சங்கத்தினர், பிரதிநிதிகள் என உள்ளிட்ட தரப்பினரும் கலந்து கொண்டனர்.