• Sep 22 2024

நெடுவூர்த் திருவிழாவின்’ இறுதி நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் பங்கேற்பு – பிரதேசத்தின் புத்தெழுச்சி தொடர்பிலும் அவதானம்!

Tamil nila / Aug 10th 2024, 6:51 pm
image

Advertisement

"மீண்டும் ஊருக்கு போகலாம்" என்னும் தொனிப் பொருளில் நெடுந்தீவின் நிலைபேறான அபிவிருத்தியை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள மாபெரும் நெடுவூர் திருவிழாவின் இறுதி நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்துள்ளார்.


உலகம் முழுவதும் பரந்து வாழும் நெடுந்தீவின் உறவுகளை ஒன்றிணைத்து பிரதேச அபிவிருத்தியினையும் உள்ளூரில் வாழும் உறவுகளினதும் வாழ்வியலை மேம்படுத்தும் நோக்கில் நெடுந்தீவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



குறித்த நெடுவூர்த் திருவிழாவின்’ இறுதி நிகழ்வுகள் இன்று (10.08.2024) நடைபெற்றன. இன்நிலையில் இன்று குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிகழ்வை பார்வையிட்டதுடன் அதன் நோக்கம் மற்றும் எட்டப்பட்ட அடைவு தொடர்பிலும்  அவதானம் செலுத்தியிருந்தார்.

முன்பதாக நெடுவூர்த் திருவிழா நிகழ்வானது நெடுந்தீவில் இம்மாதம் 4 ஆம் திகதி ஆரம்பித்த நிலையில் இன்று 10 ஆம் திகதிவரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நெடுவூர்த் திருவிழாவின்’ இறுதி நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் பங்கேற்பு – பிரதேசத்தின் புத்தெழுச்சி தொடர்பிலும் அவதானம் "மீண்டும் ஊருக்கு போகலாம்" என்னும் தொனிப் பொருளில் நெடுந்தீவின் நிலைபேறான அபிவிருத்தியை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள மாபெரும் நெடுவூர் திருவிழாவின் இறுதி நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்துள்ளார்.உலகம் முழுவதும் பரந்து வாழும் நெடுந்தீவின் உறவுகளை ஒன்றிணைத்து பிரதேச அபிவிருத்தியினையும் உள்ளூரில் வாழும் உறவுகளினதும் வாழ்வியலை மேம்படுத்தும் நோக்கில் நெடுந்தீவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த நெடுவூர்த் திருவிழாவின்’ இறுதி நிகழ்வுகள் இன்று (10.08.2024) நடைபெற்றன. இன்நிலையில் இன்று குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிகழ்வை பார்வையிட்டதுடன் அதன் நோக்கம் மற்றும் எட்டப்பட்ட அடைவு தொடர்பிலும்  அவதானம் செலுத்தியிருந்தார்.முன்பதாக நெடுவூர்த் திருவிழா நிகழ்வானது நெடுந்தீவில் இம்மாதம் 4 ஆம் திகதி ஆரம்பித்த நிலையில் இன்று 10 ஆம் திகதிவரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement