இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறிதரனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிதரனின் இல்லத்தில் இச் சந்திப்பு இன்று(16) காலை இடம்பெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறிதரனுக்கு ஜீவன் தொண்டமான் தமது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
இதன்போது, நீர் வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.