• May 17 2024

யாழ் நகரில் மது அருந்திவிட்டு இருளில் கூடும் விஷமிகள்..! மக்களே அவதானம்..!

Chithra / Dec 11th 2023, 5:08 pm
image

Advertisement

 

யாழ்ப்பாணம் முட்டாஸ்கடை சந்திப் பகுதியில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் செயலிழந்துள்ளதால் அவ்வீதியால் பயணிப்போர் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இரவு வேளைகளில் குறித்த பகுதி இருளாக காணப்படுவதை பயன்படுத்தும் கொள்ளை கும்பல் அவ்வீதியால் பயணிப்போரிடம் வழிப்பறி மற்றும் அங்குள்ள வர்த்தக நிலையளிலும் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கு ஒன்று கூடும் விஷமிகள் குழு மது அருந்திவிட்டு வீதியால் பயணிப்போருடன் முரண்படும் சப்பவங்களும் பதிவாகி வருகின்றன.

இவ்வாறன சம்பவங்களால் அவ்வீதியூடாக பயணிப்போர் மற்றும் அங்குள்ள வியாபார நிலையங்களை நடத்துவோர் இரவு வேளைகளை அச்சத்துடன் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் மற்றும் யாழ் மாநகர சபை கவனம் செலுத்தி மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

யாழ் நகரில் மது அருந்திவிட்டு இருளில் கூடும் விஷமிகள். மக்களே அவதானம்.  யாழ்ப்பாணம் முட்டாஸ்கடை சந்திப் பகுதியில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் செயலிழந்துள்ளதால் அவ்வீதியால் பயணிப்போர் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.இரவு வேளைகளில் குறித்த பகுதி இருளாக காணப்படுவதை பயன்படுத்தும் கொள்ளை கும்பல் அவ்வீதியால் பயணிப்போரிடம் வழிப்பறி மற்றும் அங்குள்ள வர்த்தக நிலையளிலும் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.அங்கு ஒன்று கூடும் விஷமிகள் குழு மது அருந்திவிட்டு வீதியால் பயணிப்போருடன் முரண்படும் சப்பவங்களும் பதிவாகி வருகின்றன.இவ்வாறன சம்பவங்களால் அவ்வீதியூடாக பயணிப்போர் மற்றும் அங்குள்ள வியாபார நிலையங்களை நடத்துவோர் இரவு வேளைகளை அச்சத்துடன் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் மற்றும் யாழ் மாநகர சபை கவனம் செலுத்தி மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement