• May 22 2026

மொரிஷியஸ் நாட்டுக்காக தயாராகும் நவீன படகு - அமைச்சர் சந்திரசேகர் விசேட களவிஜயம்

Chithra / May 21st 2026, 8:12 pm
image

 மொரிஷியஸ் நாட்டின் தனியார் துறை நிறுவனமொன்றிற்காக இலங்கையின் சீநோர் (Cey-Nor) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு வரும், 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ள பாரிய படகின் முன்னேற்றத்தைப் பார்வையிட கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று (21) முற்பகல் மட்டக்குளி சீநோர் கப்பல் கட்டும் தளத்திற்கு விசேட களவிஜயமொன்றை மேற்கொண்டார்.


55 அடி நீளம் கொண்டதும், சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் (250,000) அமெரிக்க டொலர் பெறுமதியானதுமான இந்த நவீன படகு மிக விரைவில் மொரிஷியஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.


கடந்த காலங்களில் சீநோர் நிறுவனம் போதிய கவனத்திற்கு உள்ளாகாமல் இருந்த போதிலும், தற்போதுள்ள மனித மற்றும்பௌதீக வளங்களைப் பயன்படுத்தி இந்நிறுவனத்தை சர்வதேச மட்டத்திலான ஒரு கப்பல் கட்டும் தளமாக (Dockyard) மாற்றியமைப்பதே அரசாங்கத்தின் இலக்கு என அமைச்சர்இதன்போது தெரிவித்தார்.


இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது: "சீநோர் நிறுவனம் சர்வதேச சந்தையை வெற்றிகொள்ளக்கூடிய பாரிய ஆற்றலைக் கொண்ட ஒரு நிறுவனமாகும்.


நாட்டில் பயன்படுத்தப்படும் மீன்பிடிப் படகுகளில் பாரிய அளவிலானவை சீநோர் நிறுவனத்தினாலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.


வருடாந்தம் இவ்வாறான பாரிய படகொன்று மாத்திரமே தயாரிக்கப்பட்டு வந்த நிலையை மாற்றி, அந்த உற்பத்தித் திறனை இரண்டு மடங்காக அதிகரிக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். 


அண்மையில் மேற்கொண்ட நோர்வே விஜயத்தின் போது அந்நாட்டின் தொழில்நுட்ப உதவியைப் பெற்றுக்கொள்ள இணக்கம் காணப்பட்டதுடன், அடுத்த மாதம் ஆரம்பத்தில் மேற்கொள்ளவுள்ள ஜப்பான் விஜயத்தின் ஊடாகவும் நவீன தொழில்நுட்பத்தையும் அறிவையும் சீநோர் நிறுவனத்திற்குப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கிறேன்.


சீநோர் நிறுவனத்தின் தலைவர் வசந்த மனப்பெரும இங்கு கருத்துத் தெரிவிக்கையில், மட்டக்குளி மற்றும் காரைநகர் ஆகிய இரு தளங்களையும் முழுமையாகப் பயன்படுத்தி வருடாந்தம் 4 பாரிய படகுகளைத் தயாரிப்பதன் மூலம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான அந்நியச் செலாவணியை ஈட்டத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


கடற்றொழில் அமைச்சின் நான்கு வருடத் திட்டத்தின் கீழ், தற்போதைய 300 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை 600 மில்லியன் டொலர்களாக உயர்த்துவதற்கு சீநோர் நிறுவனம் பாரிய பங்களிப்பை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


இந்நிகழ்வில் அமைச்சின் மற்றும் சீநோர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


மொரிஷியஸ் நாட்டுக்காக தயாராகும் நவீன படகு - அமைச்சர் சந்திரசேகர் விசேட களவிஜயம்  மொரிஷியஸ் நாட்டின் தனியார் துறை நிறுவனமொன்றிற்காக இலங்கையின் சீநோர் (Cey-Nor) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு வரும், 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ள பாரிய படகின் முன்னேற்றத்தைப் பார்வையிட கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று (21) முற்பகல் மட்டக்குளி சீநோர் கப்பல் கட்டும் தளத்திற்கு விசேட களவிஜயமொன்றை மேற்கொண்டார்.55 அடி நீளம் கொண்டதும், சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் (250,000) அமெரிக்க டொலர் பெறுமதியானதுமான இந்த நவீன படகு மிக விரைவில் மொரிஷியஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.கடந்த காலங்களில் சீநோர் நிறுவனம் போதிய கவனத்திற்கு உள்ளாகாமல் இருந்த போதிலும், தற்போதுள்ள மனித மற்றும்பௌதீக வளங்களைப் பயன்படுத்தி இந்நிறுவனத்தை சர்வதேச மட்டத்திலான ஒரு கப்பல் கட்டும் தளமாக (Dockyard) மாற்றியமைப்பதே அரசாங்கத்தின் இலக்கு என அமைச்சர்இதன்போது தெரிவித்தார்.இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது: "சீநோர் நிறுவனம் சர்வதேச சந்தையை வெற்றிகொள்ளக்கூடிய பாரிய ஆற்றலைக் கொண்ட ஒரு நிறுவனமாகும்.நாட்டில் பயன்படுத்தப்படும் மீன்பிடிப் படகுகளில் பாரிய அளவிலானவை சீநோர் நிறுவனத்தினாலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.வருடாந்தம் இவ்வாறான பாரிய படகொன்று மாத்திரமே தயாரிக்கப்பட்டு வந்த நிலையை மாற்றி, அந்த உற்பத்தித் திறனை இரண்டு மடங்காக அதிகரிக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அண்மையில் மேற்கொண்ட நோர்வே விஜயத்தின் போது அந்நாட்டின் தொழில்நுட்ப உதவியைப் பெற்றுக்கொள்ள இணக்கம் காணப்பட்டதுடன், அடுத்த மாதம் ஆரம்பத்தில் மேற்கொள்ளவுள்ள ஜப்பான் விஜயத்தின் ஊடாகவும் நவீன தொழில்நுட்பத்தையும் அறிவையும் சீநோர் நிறுவனத்திற்குப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கிறேன்.சீநோர் நிறுவனத்தின் தலைவர் வசந்த மனப்பெரும இங்கு கருத்துத் தெரிவிக்கையில், மட்டக்குளி மற்றும் காரைநகர் ஆகிய இரு தளங்களையும் முழுமையாகப் பயன்படுத்தி வருடாந்தம் 4 பாரிய படகுகளைத் தயாரிப்பதன் மூலம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான அந்நியச் செலாவணியை ஈட்டத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.கடற்றொழில் அமைச்சின் நான்கு வருடத் திட்டத்தின் கீழ், தற்போதைய 300 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை 600 மில்லியன் டொலர்களாக உயர்த்துவதற்கு சீநோர் நிறுவனம் பாரிய பங்களிப்பை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.இந்நிகழ்வில் அமைச்சின் மற்றும் சீநோர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement